கொண்டு வா ஓர் ரோஜா இதழ்கள் மாறி மாறி உதிர்த்துக் கொண்டிருக்கிறது உன் பெயரை இருவிழிகள் என்னை மீறிமீறி தேடிக் கொண்டிருக்கிறது உன் உருவை இசையாய் விழுந்த உன் சிரிப்பில் கசையாய் பிணைந்த என் மனம் விசைகொண்டு மேலெழ வழியில்லையோ வெளி விழும் சொல் எல்லாம் கவிதையாய் காற்றில் கமழ்கிறது உன்னால் உள்ளெழும் உற்சாகம் உரமிட்டு உயிர்ப்பிக்கிறது உயிரை உன்னை காணும் முன்னால் கட்டிக் கொண்டாய் கைகளை மார்போடு முகிழ்ந்த உன் இறுக்கத்தில் முட்டிமோதி நுழையும் காற்றாய் நானாயிருக்க கூடாதா ஏன் என்னை பெயர்த்துச் சென்றாய் உன்னோடு மீண்டு வந்து தந்துவிடு வாழ முயல்வேன் மீதி உயிரோடு குளிர்ந்த தருவில் விளைந்த நற்கனியே உன் எழிலில் சிதைந்த வினைஞன் நான் கட்டிப் போட்டு உருட்டுக்கட்டை கொண்டு சாத்தினாலும் முகமலரும் உன் சந்தம் இருந்தால் நான் சாகமாட்டேனே அன்பு கொண்டு அலைந்த இந்தற்பனை காண செய்வாய் சொர்க்க கற்பனை எழுத எழுத நீளும் இப்பாடல் கேட்க கேட்க உன்னைக் கொன்று விட்டால் எழும் போது எடுத்து வா ஓர் ரோஜா... ஓ, ரோஜா... -பிரபா
முகிழத் தொடங்கும் அரும்பின் சிறுநகை