முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

முகிழ்ந்துக் கொண்டிருக்கும் ஒரு அரும்பின் மடல்

An oak tree is a daily reminder  
that great things often have small beginnings.
-Matshona Dhliwayo

இடது கையை மேலாக தூக்கி கைபேசியை உயர்த்தி அதில் செருகப்பட்டிருக்கும் செல்ஃபி ஆப்பின் வழியே தன்னைத் தானே படம் எடுத்து உங்கள் பார்வைக்கு பதிவிடும் வழக்கமான செயலின் மாறுபட்ட வடிவம் தான் இந்த தளத்தின் தொடக்கம். அதில் என் முகத்தின் வழியே உணர்ச்சிகளைப் படிப்பீர்கள். இதில் எழுத்தின் வழியே. வேறுபாடு அவ்வளவே.

இயற்கையாகவே நான் அதிகம் பேசக் கூடிய கதாபாத்திரம் இல்லை. அறிமுகமானவுடனே கவர்ந்து விடும் அளவிற்கு ஹாஸ்யம் கூட நிறைந்தவன் இல்லை. அந்த தயக்க குணமே என்னை எழுத்தின் மீதும் வாசிப்பின் மீதும் பிடிப்புள்ளவனாக்கியது.

என்னிடமிருந்து எவ்விதமான செய்திக்கும் உடனடி எதிர்வினையும் எளிதில் கிடைத்து விடாது. நான் அதற்கிட்ட பெயர் சோம்பல். என் அப்பாவின் வார்த்தைகளின் படி 'ஃபிரசன்ஸ் ஆப் மைண்ட்' குறைவு.

எந்த செயலுக்கும் ஒரு தூண்டுதல் உண்டு என்கிற அறிவியல் விதிப்படி இத்தளத்தின் தொடக்கத்திற்கும் ஒரு காரணம் உண்டு. நான் பேச விரும்புகிறேன் - இந்த ஒற்றை வரியிலிருந்து தான் முகிழ் என்கிற வலைப்பூ முகிழ்ந்திருக்கிறது.


கணக்கியலில் குறிப்பிடப்படும் திருத்தியமைக்கப்பட்ட கொள்கைகளில் ஒன்று Materiality Principle என்பது. அதன் தமிழ் மொழி பெயர்ப்பு மிகச் சரியாய் தெரியவில்லை. அதன் பொருள் முக்கியத்துவம் அற்ற, தொடர்பில்லாத விஷயங்களை புறக்கணித்து விடலாம் அல்லது வேறு ஏதாவதுடன் இணைத்துக் கொள்ளலாம் என்பது. அதற்கேற்ப இதில் தேவையில்லாத பொருத்தமில்லாத பதிவுகளை எழுதப் போவதில்லை என்பது என் உறுதியான நிலைப்பாடு. முக்கியத்துவம் எது என்பதற்கான வரையறையிலே பல்வேறு குழப்பங்கள் இருக்க தான் செய்கின்றன. அவற்றை முதலில் நான் விளங்கி கொண்டு உங்களுக்கு தெரியப்படுத்துகிறேன் (!).

இந்த சிறு பையனின் சிறு முயற்சி இத்தொடக்கம். இதில் நான் செய்ய போகும் பிழைகளை செய்வதற்கு முன்னே சொல்லி மன்னிப்பு கேட்டு விடுகிறேன்.

- கவிதை என்ற பெயரில் எதையாவது எழுதி கவிஞனாக முயற்சிப்பவன் என்று சப் டைட்டில் போடுவது
- சமூக அக்கறை குறித்த கட்டுரைகளை அரைவேக்காட்டு தனத்துடன் சமைப்பது
- வாசித்த புத்தகத்துக்கு மதிப்புரை என்ற பெயரில் புத்தகம் எழுதியவரை விட அதிகம் யோசித்து எழுதத் துணிவது

இது போன்ற பிழைகளுடன் உங்களுக்கு தோன்றவிருக்கும் குற்றங்களுக்கும் சேர்த்து மன்னிப்பு கடிதத்தை சமர்பித்து விடுகிறேன். நிச்சயம் இவையெல்லாம் தொடராது பயில விரும்புகிறேன்.

உங்களுடன் என் எழுத்தின் வழியே பேசும் முயற்சி இத்தளம் என்பது ஒரு கோணம் என்றால், எனக்கான எழுத்துப் பயிற்சி என்பது மற்றொரு கோணம்.

முகநூல் உள்ள குறைகளில் ஒன்று பழைய பதிவுகள் பார்வைக்கு எளிதில் கிடைத்து விடாது. டைம்லைன் என்பது நிகழ்ந்துக் கொண்டிருக்கும் ஒற்றை கோடு. ஆனால் வலைத்தளங்கள் அக்குறையை எளிதாக கலைந்து விடுகின்றன. அதுவே எனது குடிபெயர்ப்புக்கும் காரணம்.

ஈராயிரத்திற்கும் மேலான அகவை கொண்ட தமிழ் மொழியின் எழுத்துகளில் என் கை ரேகையும் பதிவது தமிழின் பெருமிதங்களில் ஒன்றே தவிர. வேறல்ல.

இறுதியாய் அனைவரின் அன்பையும் ஆதரவையும் எதிர்பார்த்து... (க்ளிஷே என்றெல்லாம் கலாய்க்க கூடாது. இது நம் பண்பாடு)

- பிரபா

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இழப்பு (சிறுகதை)

மழையிருட்டு. மின்சாரம் தடைப்பட்டு போனது. நான்கு தெருக்கள் இருபுறமும். ஒன்றிணைக்கும் மையச் சாலை. கண்மாயை ஒட்டி இரண்டு வளைவு. மொத்த ஊருமே அவ்வளவு தான். ஒரு பெரிய கண்மாயின் பரப்பு கூட தேறாத நிலம். பதட்டம். சீதாவைச் சுத்தி இரண்டு மூணு பேரு மட்டுமே. “ஆம்பிளையாளுக யாரும் இல்லையா...” சாந்தியின் குரல் வளவு வாசலில் நீர் ஒழுகும் சத்தத்தை தாண்டி ஒலித்தது. கண்ணப்பனுக்கு பத்து வயது. தன்னுடைய தங்கச்சியை அம்மா சுமந்துக் கொண்டிருந்தாள். குழந்தை பிறக்கும் முன்பே தங்கச்சி தான் என்பதில் அவன் உறுதியாய் இருந்தான். பின்கட்டில் குடியிருக்கும் இலட்சுமி அக்கா வம்பிழுக்கும், “அது தம்பி பாப்பா டா”. அம்மாவும் விளையாட்டாய் ஆமோதிப்பாள். “இல்லை, அது தங்கச்சி பாப்பா தான்” என உறுதியாய் நிற்பான் கண்ணப்பன். லட்சுமி அக்காவும் கையைப் பிசைந்துக் கொண்டு அம்மாவின் கால்மாட்டுக்கு பக்கத்துல நின்றுக் கொண்டிருந்தாள். சாந்தி கண்ணப்பனைக் கூப்பிட்டு, “ஓடி போய் ஒத்தையண்ணன் வீட்டுல ஆளுக இருந்தா, அம்மாவுக்கு வலி வந்துருச்சுன்னு சொல்லி கூட்டிட்டு வாப்பா” என அனுப்பி வைத்தாள். நுனி கூர்மையாக இருக்கும் குடையை எடுத்துக் கொண்டு

பிறழ் உறவை எழுதுவது எதற்காக? - '57 சிநேகிதிகள்...' புத்தகத்தை முன்வைத்து ஒரு உரையாடல்...!

முன்குறிப்பு: வெகு நாட்களுக்கு பிறகு மீண்டும் பிளாக்கில் எழுதத் தொடங்கியிருக்கிறேன். வழக்கம் போல புது ஆண்டு பிறக்கும் போது உதித்து ஒரு திங்களுக்குள் மறையும் உறுதிமொழிகள் போல அல்லாமல் தொடர்ச்சியாக இந்த ஆண்டு செயல்பட வேண்டும் என நினைத்திருக்கிறேன்.  புத்தக வாசிப்பு சென்ற ஆண்டு நம்ப முடியாதளவுக்கு குறைந்திருக்கிறது. தனிப்பட்ட காரணங்கள் பல சொல்லலாம். ஆனாலும் அவை சமாளிப்புக்கு மட்டுமே உதவக் கூடும். இந்த ஆண்டு புதிதாக 1000 மணிநேர வாசிப்பு போட்டி ஒன்றில் இணைத்திருக்கிறேன். ஆரம்பித்து 10 நாட்கள் சென்றிருந்தாலும் நேற்று தான் தொடர்ச்சியாக 3 மணிநேரம் வாசிக்கக் கிடைத்தது. எழுத்தாளர் வா.மு.கோமுவின் நாவல் ஒன்றை ஒரே மூச்சில் வாசித்து முடித்தேன். அந்த நாவலை முன்வைத்தே இந்தக் குறிப்பை எழுதுகிறேன். இனி நீங்கள் தொடர்ச்சியாக நான் எழுதுவதை இங்கு வாசிக்கலாம். ஐம்பத்தேழு சிநேகிதிகள் சிநேகித்த புதினம்  எழுத்தாளர்: வா.மு.கோமு  உயிர்மை வெளியீடு முதற்பதிப்பு: டிசம்பர் 2022 பாலியல் சார்ந்த கதைகள் எழுதப்படுவதன் நோக்கம் என்ன? பாலியல் கதைகள் வெறும் கிளர்ச்சிக்கானவையா? அவை இலக்கியமாகுமா? வணிக இலக்கியம் என்பதற்கு நெரு

நட்சத்திரங்களுக்கும் நிலத்துக்குமான ராட்டினம்! - நட்சத்திரவாசிகள் நாவல் அனுபவம்

நாவல் அட்டைப்படம் | பதிப்பகம் காலச்சுவடு முன்குறிப்பு: நட்சத்திரவாசிகள் நாவலுக்காக எழுத்தாளர் கார்த்திக் பாலசுப்பிரமணியன் 2021 ஆம் ஆண்டுக்கான யுவபுரஸ்கார் விருதைப் பெற உள்ளார். அவரின் நூல் குறித்து கடந்த ஆண்டு ஏப்ரலில் நான் எழுதிய கட்டுரையை ஒரு விமர்சனப் போட்டிக்கு அனுப்பியிருந்தேன். போட்டி முடிவுகள் என்ன ஆனது எனத் தெரியவில்லை. ஒரு வருடத்திற்கு மேலாகிவிட்டது. அது போக தற்போது வெளிவந்திருக்கும் இந்த அறிவிப்பைக் காரணமாக வைத்து மெயிலின் அனுப்பிய அஞ்சலில் தூசி படித்திருந்த இந்தக் கட்டுரையை இங்கு பதிகிறேன். இந்தியாவின் தாராளமயமாக்கலுக்குப் பிறகு வளர்ந்த துறைகளில் தகவல் தொழில்நுட்பத் துறையும் ஒன்று. வேறு எந்த நாட்டை விடவும் இங்கு பரவலாக நிறுவப்பட, இந்திய சந்தையில் கிடைக்கிற இளைஞர்களின் திறனும் அவர்களுக்குக் கொடுக்க வேண்டியுள்ள மலிவான ஊதியமும் காரணிகளாக இருக்கின்றன. சில பத்தாண்டுகளில் இதன் வளர்ச்சி என்பது இந்தியாவின் நிகர பொருளாதார மதிப்பில் எட்டு விழுக்காட்டுக்கு நெருக்கத்தில் உள்ளது. நான்கு மில்லியன் இந்தியர்களின் வாழ்வாதரமாக மாறியுள்ளது. தவிர்க்க முடியாத சக்தியாக வளர்ந்து நிற்கும் இந்தத் து