காரைக்குடி 11/02/2017
காரைக்குடியில் புத்தக திருவிழா என்று
கேள்விபட்டதும் காற்றில் எகிறிக் குதித்த என் மனதின் உற்சாகம் நேரில் அதன் தோற்றத்தை கண்டவுடன் ஊசியின் முனைப்பட்ட பலூன் போல சுருங்கி இளைத்து பின் மொத்தமாக மடிந்துவிட்டது.
கலை இலக்கிய நகரமான காரைக்குடியிலும் புதுக்கோட்டையிலும் தான் பல ஆரம்ப கால பதிப்பகங்களும் அச்சுக் கூடங்களும் தொடங்கப்பட்டு இயங்கி வந்ததாக வரலாறு கூறுகிறது. ஆனால் இந்த புத்தக திருவிழாவைப் பார்த்த யாருக்கும் அதன் மேல் கேள்வி எழுவதற்கான வாய்ப்பு உண்டு.
கம்பன் மணிமண்டபத்தில் நடைப்பெற்றுக்கொண்டிருந்த புத்தக திருவிழாவுக்கு சென்ற போது உண்மையாகவே அதிர்ந்து போனேன். விளம்பரத்தில் 50 அரங்குகள் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் அங்கு இருந்தது 20 க்கும் குறைவான புத்தக விற்பனையாளர்களே. பதிப்பகங்கள் என்று பார்த்தால் கிழக்கை தவிர யாரும் இல்லை. காரைக்குடியில் இயங்கி வரும் CBSE தர பள்ளிகள் சில இடம்பெற்றிருந்தன. கோவிலூர் மடாலயம் சார்பில் ஒன்றும் குன்றக்குடி அடிகளார் சார்பில் ஒரு அரங்கமும் எடுக்கப்பட்டிருந்தது. தவிர்த்து காரைக்குடியில் இயங்கி வரும் வள்ளி புத்தகாலயம், தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் இடம்பெற்றிருந்தன. மொத்தமே அவ்வளவு தான்.
எனக்கு மிகப்பெரிய வியப்பு என்னவென்றால் காரைக்குடியிலேயே இயங்கும் பதிப்பகங்களும் தமிழ்நாட்டின் முன்னணி பதிப்பகங்கள் பலவும் புத்தக திருவிழாவில் கலந்துக்கொள்ளவில்லை. காரணம் என்னவென தெரியவில்லை. பழமையான பதிப்பகங்கள் நிறைந்த நகரில் நடைபெறும் திருவிழாவில் பல அறிய பதிப்புகளை சேகரிக்க முடியும் என்கிற எனது கனவுகளையெல்லாம் உடைத்துவிட்டு ஏமாற்றமே எஞ்சி நின்றது.
கம்பன் மணிமண்டபமே பராமரிப்பு இன்றி காட்சியளித்தது கவலைக்குரியது. சிதைப்பட்டு நிற்கின்ற ஆலயம் போல் காட்சியளித்தது. மக்கள் கூட்டமும் பெருமளவில் இல்லை (விடுமுறை நாளில் கூட). பொழிவை இழந்து காட்சியளித்து கொண்டிருந்த நிகழ்வில் இருந்து வெளியேறும் போது எடுத்த செல்பி கூட தெளிவற்று இருந்தது, புத்தகங்களை காணாது வாடும் காதலர்களின் மனநிலையைப் போல (மிகச்சில நல்ல தொடர்புகள் பெற முடிந்தது மட்டுமே இந்த நாளின் பயன்).
-பிரபா
காரைக்குடியில் புத்தக திருவிழா என்று
கலை இலக்கிய நகரமான காரைக்குடியிலும் புதுக்கோட்டையிலும் தான் பல ஆரம்ப கால பதிப்பகங்களும் அச்சுக் கூடங்களும் தொடங்கப்பட்டு இயங்கி வந்ததாக வரலாறு கூறுகிறது. ஆனால் இந்த புத்தக திருவிழாவைப் பார்த்த யாருக்கும் அதன் மேல் கேள்வி எழுவதற்கான வாய்ப்பு உண்டு.
கம்பன் மணிமண்டபத்தில் நடைப்பெற்றுக்கொண்டிருந்த புத்தக திருவிழாவுக்கு சென்ற போது உண்மையாகவே அதிர்ந்து போனேன். விளம்பரத்தில் 50 அரங்குகள் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் அங்கு இருந்தது 20 க்கும் குறைவான புத்தக விற்பனையாளர்களே. பதிப்பகங்கள் என்று பார்த்தால் கிழக்கை தவிர யாரும் இல்லை. காரைக்குடியில் இயங்கி வரும் CBSE தர பள்ளிகள் சில இடம்பெற்றிருந்தன. கோவிலூர் மடாலயம் சார்பில் ஒன்றும் குன்றக்குடி அடிகளார் சார்பில் ஒரு அரங்கமும் எடுக்கப்பட்டிருந்தது. தவிர்த்து காரைக்குடியில் இயங்கி வரும் வள்ளி புத்தகாலயம், தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் இடம்பெற்றிருந்தன. மொத்தமே அவ்வளவு தான்.
எனக்கு மிகப்பெரிய வியப்பு என்னவென்றால் காரைக்குடியிலேயே இயங்கும் பதிப்பகங்களும் தமிழ்நாட்டின் முன்னணி பதிப்பகங்கள் பலவும் புத்தக திருவிழாவில் கலந்துக்கொள்ளவில்லை. காரணம் என்னவென தெரியவில்லை. பழமையான பதிப்பகங்கள் நிறைந்த நகரில் நடைபெறும் திருவிழாவில் பல அறிய பதிப்புகளை சேகரிக்க முடியும் என்கிற எனது கனவுகளையெல்லாம் உடைத்துவிட்டு ஏமாற்றமே எஞ்சி நின்றது.
கம்பன் மணிமண்டபமே பராமரிப்பு இன்றி காட்சியளித்தது கவலைக்குரியது. சிதைப்பட்டு நிற்கின்ற ஆலயம் போல் காட்சியளித்தது. மக்கள் கூட்டமும் பெருமளவில் இல்லை (விடுமுறை நாளில் கூட). பொழிவை இழந்து காட்சியளித்து கொண்டிருந்த நிகழ்வில் இருந்து வெளியேறும் போது எடுத்த செல்பி கூட தெளிவற்று இருந்தது, புத்தகங்களை காணாது வாடும் காதலர்களின் மனநிலையைப் போல (மிகச்சில நல்ல தொடர்புகள் பெற முடிந்தது மட்டுமே இந்த நாளின் பயன்).
-பிரபா
கருத்துகள்
கருத்துரையிடுக