அவள் : அப்புறம்
அவன் : ஒண்ணும் இல்ல
அவள் : ஒண்ணுமே இல்லையா...
அவன் : ஆமா. ஒண்ணுமே இல்லை
அவள் : சரி வச்சுடுறேன்
அவன் : இல்லை இல்லை இருக்கு
அவள் : இல்லையா இருக்கா
அவன் : இருக்கு
அவள் : அப்ப சொல்லு
அவன் : எல்லாமே நீ தான்
அவள் : வேற
அவன் : நீயின்றி எதுவுமில்லை
அவள் : வேற
அவன் : உன்னால் தான் நான் வாழ்வது
அவள் : வேற வேற புதுசா ஏதாவதுடா
அவன் : புதுசாவா...
அவள் : ம்
அவன் : ஆசைகள் கோடி
அவள் : ம்
அவன் : அதை நிறைவேற்ற நீ வாடி
அவள் : போடா
அவன் : நீ வரலைனா நான் வருவேன் தேடி
அவள் : ஹா... ஹா...
அவன் : உன் சிரிப்பில் நான் உடைந்த ஜாடி
அவள் : சூப்பர்டா
அவன் :
நீ என் வாழ்வில் நுழைந்த மறுகணம்
நான் தொலைகிறேன் தினம் தினம்
நீயின்றி நானிங்கு வெறும் பிணம்
நீ தான் எனைச் சூழும் மலர்வனம்
அவள் : பாட்டாவே பாடுறீயா...
கண்கள் கொண்டு சிறை பிடித்தாய்
வண்ணங்கள் காட்டி விடுதலை கேட்டேன்
வார்த்தைகள் உதிர்த்து வலை விரித்தாய்
விரும்பி நானும் விழுந்து விட்டேன்
கைக்குட்டை நூலாய் சுருக்கி விட்டாய் - உன்
கைமீறி போக நான் விரும்பவில்லை
மூச்சுக் காற்றில் நனைய செய்தாய்
மூன்று நாளாய் பிடித்த தடுமன் அகலவில்லை
கனவில் வந்து படுத்துகிறாய்
காலையில் அழைத்து சிணுங்கிறாய்
கைபேசி அணைத்திருந்தேன்
அதனால் அழைப்பை ஏற்கவில்லை - நேரில்
கண்டால் கோபம் கொண்டு முகத்தை திருப்புகிறாய்
செல்ல சண்டைகள் நீ செய்கிறாய்
கடைசியில் காலில் விழுவது
நானாகவே இருக்கிறேன்
இப்போதும் எப்போதும்
வதைத்து சிதைத்து
என்னை கொல்கிறாய்
உன் வத்தல் குழம்பில்
நான் ஊறி திளைக்கிறேன்
என்ன தான் முடிவு சொல்கிறாய்
முடியை பிய்த்து
நான் சிந்திக்கிறேன்
நான்
சிந்திக்கிறேன்
அவள் : கலக்கிட்டடா.... ஓ... டைம் மூணாயிருச்சு. நான் காலையில திரும்பி கால் பண்றேன். டேக் கேர். பை
அவன்: திரும்பவுமா
-பிரபா
கருத்துகள்
கருத்துரையிடுக