எம்.டி.வாசுதேவன் நாயர் எழுதிய இறுதி யாத்திரை நாவலை கோவையிலிருந்து திரும்பி கொண்டிருந்த பயணத்தின் போது வாசித்தேன். பாதி நாவல் மட்டுமே வாசிக்க முடிந்தது. வீட்டிற்கு வந்த இரண்டாவது நாள் காலையில் அதனை முடித்து விட்டு அடுத்து வாசிப்போம் என்ற நினைப்பில் படிக்கத் தொடங்கினேன். சற்று முன் தான் வாசித்து முடித்தேன். ஆனால் அதன் பிறகு எதுவும் செய்ய முடியவில்லை. எப்போதுமே ஒரு புத்தகத்தை வாசித்து முடித்தவுடன் ஏனென்றே தெரியாத ஒரு அமைதி வந்து மனதில் அமர்ந்து கொள்ளும். அது நீடிக்கும் நேரம் அந்த புத்தகத்தின் செறிவைப் பொருத்தது. எம்.டி.வி ஏன் ஒரு மாஸ்டர் என்பதை இந்த நாவலின் வழியாக உணர முடிந்தது. ஆரம்ப அத்தியாயங்களில் யார் எதை சொல்ல வருகிறார்கள் என்பதைக் கிரகித்து கொள்ள சிறிது நேரம் எடுக்கிறது. ஒன்றிரண்டு முறை பின்னால் சென்று வாசிக்க நேரிடும். ஆனால் அது கொஞ்ச நேரத்திற்கு தான். நாவலின் பேட்டர்ன் பிடிபட்டவுடன் இலகுவான வாசிப்புக்கு நாம் நகரத் தொடங்கிவிடுவோம். வரிகளுக்கிடையேயான சொல்லப்படாத அர்த்தங்கள் தான் நாவலின் எடையைத் தீர்மானிக்கிறது. அத்தனை ஆழமாக அதுவும் வெளிப்படையாக சொல்லாமலே வாசகருக்கு ஒன்றை புரிய வைக்க
முன்குறிப்பு: வெகு நாட்களுக்கு பிறகு மீண்டும் பிளாக்கில் எழுதத் தொடங்கியிருக்கிறேன். வழக்கம் போல புது ஆண்டு பிறக்கும் போது உதித்து ஒரு திங்களுக்குள் மறையும் உறுதிமொழிகள் போல அல்லாமல் தொடர்ச்சியாக இந்த ஆண்டு செயல்பட வேண்டும் என நினைத்திருக்கிறேன். புத்தக வாசிப்பு சென்ற ஆண்டு நம்ப முடியாதளவுக்கு குறைந்திருக்கிறது. தனிப்பட்ட காரணங்கள் பல சொல்லலாம். ஆனாலும் அவை சமாளிப்புக்கு மட்டுமே உதவக் கூடும். இந்த ஆண்டு புதிதாக 1000 மணிநேர வாசிப்பு போட்டி ஒன்றில் இணைத்திருக்கிறேன். ஆரம்பித்து 10 நாட்கள் சென்றிருந்தாலும் நேற்று தான் தொடர்ச்சியாக 3 மணிநேரம் வாசிக்கக் கிடைத்தது. எழுத்தாளர் வா.மு.கோமுவின் நாவல் ஒன்றை ஒரே மூச்சில் வாசித்து முடித்தேன். அந்த நாவலை முன்வைத்தே இந்தக் குறிப்பை எழுதுகிறேன். இனி நீங்கள் தொடர்ச்சியாக நான் எழுதுவதை இங்கு வாசிக்கலாம். ஐம்பத்தேழு சிநேகிதிகள் சிநேகித்த புதினம் எழுத்தாளர்: வா.மு.கோமு உயிர்மை வெளியீடு முதற்பதிப்பு: டிசம்பர் 2022 பாலியல் சார்ந்த கதைகள் எழுதப்படுவதன் நோக்கம் என்ன? பாலியல் கதைகள் வெறும் கிளர்ச்சிக்கானவையா? அவை இலக்கியமாகுமா? வணிக இலக்கியம் என்பதற்கு நெரு