முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

யாருக்கானது ஏழு தேசங்களின் அரியணை? - கேம் ஆப் த்ரோன்ஸ் ஒரு பார்வை

உலகம் முழுவதும் கொண்டாடப்பட்ட தொலைகாட்சி தொடர் கேம் ஆப் த்ரோன்ஸ். கோடிக்கணக்கான ரசிகர்களின் அன்பிற்கு பாத்திரமானார்கள் இந்த தொடரின் நாயகர்கள். இந்த தொடர் எளிதில் வசீகரிக்க கூடியது. மொத்தம் எட்டு சீசன்களில் 73 எபிசோட்கள். இப்போது தான் நீங்கள் முதல் பாகத்தின் எபிசொட் பார்க்க தொடங்குகிறீர்கள் எனில், மொத்த சீசனுக்கமான நேரத்தை முன்னரே ஒதுக்கிக் கொள்ளுங்கள். உங்கள் மற்ற வேலைகளை இது திசை திருப்பக் கூடும். அவ்வளவு சுவாரசியமான கதை தொடர். அந்த சுவாரசியத்திற்கு காரணம்  தொடரில் நடமாடும் மனிதர்கள். அவர்களின் கதாபாத்திர வடிவமைப்பு. பேராசை, வன்மம், அதிகார போதை, செல்வம், பாலியல் வேட்கை என எதுவெல்லாம் மனிதனைத் திசை திருப்பக் கூடியதோ எதுவெல்லாம் அவனை சிறைப்படுத்த கூடியதோ பிறழ்ந்து சிந்திக்க செய்கிறதோ அதுவெல்லாம் தான் இந்த தொடர் முழுவதையும் கோர்க்கும் இழைகள்.
Game Of Thrones | OSN
மனிதர்கள், கதைகள், பேய்கள், அரியணை, போர் -இவை தான் கேம் ஆப் த்ரோன்ஸ். ஏழு ராஜ்ஜியங்களும் ஒரு அரியணையின் கீழ் ஆட்சி செய்யப்படுகிறது. Mad King ற்கு பிறகு முறையான வாரிசு என அரியணைக்காக போராடும் டேநேரியஸ் தான் ஒட்டுமொத்த தொடரின் ஹீரோ. ட்ராகன்களின் தாய். ஜானின் பிறப்பு குறித்து அறியும் முன்பு வரைக்கு அவன் மீது மாசற்ற காதலோடு இருப்பவள். அதிகாரத்திற்கு இடையூறு எனும் போது மனிதர்கள் மாறி விடுவது உண்டு. 
Has 'Game of Thrones' Become Too Predictable?
அரியணை கனவுகள் பலருக்கும் உண்டு. அரியணை தக்க வைக்க விரும்புவோரையும் சேர்த்து தான். அதற்கான வழி போர். ஏழு அரசுகளும் சிதையும் வெஸ்டோரோஸ்(அரியணையை தாங்கி நிற்கும் தலைநகரம்) நகரத்தைக் கைப்பற்ற முயற்சிக்கின்றன. லிட்டில்பிங்கர், வேரிஸ், மேய்ஸ்டர் என சதிப் பின்னல்களில் அரியணைக்கான போர் இன்னும் சிக்கல்களாக உருமாறுகின்றன.

ஏழு ராஜ்ஜியங்களின் மன்னர்களும் அரியணைக்கு ஆசைப்படுகையில் அவை ஒவ்வொன்றிலும் ஏற்கனவே இருக்கும் ஆட்சியைக் கைப்பற்ற இன்னும் சிலர் போராடுகின்றனர். இப்படியாக அதிகாரத்துக்கான போரில் சிக்கும் அத்தனை மனிதர்களும் அதன் சதுரங்கத்தில் தனக்கான playtime வரை விளையாடப்பட்டு வெட்டி சாய்க்கப்படுகின்றனர்.

அரியணைக்கான போர் ஒரு கோணம் என்றால் இறப்பிற்கும் வாழ்விற்குமான போர் மறுபுறம். wall என்பது செமயான கான்செப்ட். இறந்து போன மனிதர்களை whitewalkers என்னும் பேய்களாக எழுப்பும் NightKing ற்கும் உயிர்த்திருப்பவர்களுக்கும் ஆன அச்சுறுத்தும் சண்டை மற்றொரு கோணம்.
Here Are Eight Predictions For Season 8 Of 'Game Of Thrones'
வலுவான கதையமைப்பு. மிகச் சாதாரணமாக நாம் நினைக்கும் ஒரு பிரேம் கூட பிந்தைய கதையின் திருப்பமாக அமைந்துவிடும். நம்மை கதாபாத்திரத்தோடு ஒன்ற செய்து நாம் ஒரு அணியை பார்வையாளராக விரும்பத் தொடங்கும்போது  கருணையே இல்லாமல் அவர்கள் கொலை செய்யப்பட்டு விடுவார்கள். நம்பிக்கையற்று இருக்கும் போது இன்னொரு கை உயரும். மீண்டும் ஆட்டம் தொடங்கும். நாம் பெட் கட்டும் குதிரை தோற்பதே நம்மை அடுத்த எபிசொட் நோக்கி நகர்த்துகிறது.

எல்லாவற்றுக்கும் மேலாக இதை ஒரு குடும்பத்தின் கதையாக பார்ப்பதை நான் மிகவும் விரும்புகிறேன். ஸ்டார்க்கின் குடும்பம். முதல் எபிசோடில் மன்னரை வரவேற்கும் போது சேரும் குடும்பத்தின் உறுப்பினர்கள் சிதறி பிரிந்து விழுந்து இறந்து மீண்டு சேர்ந்து மீண்டும் உதிர்கிற கதை. ஒவ்வொரு கதாபாத்திரமும் சந்திக்கிற சூழல்கள் மூலம் பெறுகிற குணங்கள், கற்றுக் கொள்ளும் பாடங்கள், எடுக்கும் முடிவுகள் என புனைவு நிரம்பிய நீண்ட குடும்பக் கதை. இந்த பார்வை எனக்கு பிடித்திருக்கிற காரணம் குடும்பத்தில் யாரும் இயல்பிலேயே மன்னராகும் கனவு கொண்டவர்கள் அல்ல. ஆனால் அந்த கனவு கொண்டவர்களால் பாதிக்கப்படுபவர்கள். அதனால் தங்கள் வாழ்வின் போக்கைத் தீர்மானித்துக் கொண்டவர்கள். ஆர்யா, ஸான்சா, பிரான், ராப், ரிக்கான், ஜான்(?) என ஸ்டார்க்கின் வாரிசுகள் வெவ்வேறு வழியைத் தேர்ந்தெடுக்கிறார்கள்.  
Game of Thrones family tree: How are the Starks and Targaryens ...
டேநேரியஸ், ட்ராகன்களின் தாய். ஒரு நல்ல கேரக்ட்டர் ஆர்க். அவளுடைய எழுச்சியில் ஆரம்பித்து வீழ்ச்சி வரை. டிரியன் லானிஸ்டர் இன்னொரு சிறந்த பாத்திர படைப்பு. இப்படி எல்லா பாத்திரங்களையும் குறிப்பிட முடியும்.

வன்மம், காமம் என இரத்தமும் யுத்தமும் தொடர் நெடுக பார்க்க கிடைக்கும். மெல்லிய மனசு கொண்டவர்கள் நிச்சயம் தவிர்க்க வேண்டிய தொடர்.

படைப்பு ரீதியாக தன்னுடைய உச்சத்தை பார்வையாளர்களின் உணர்ச்சி மாறுதல்களில் நிலைப்படுத்திக் கொள்கிறது தொடர். எவ்வளவு நேசிக்கிறோம் என்றால் அதன் ஒரு பகுதியாகவே, ஒரு காட்சி நமக்கு நேர போவதாகவே, நாம் அதன் தாக்கத்தை நுகரப் போவதாகவே ஆட்பட்டுவிடுவோம். அது தான் படைப்பின் வெற்றியும் கூட.

நெட் ஸ்டார்க், ராப், கேட், ட்ராகன், தியான், டிரியன், லியன்னா மோர்மன்ட் என எல்லோருக்குமாக அழுது தீர்த்தேன். செர்சீ, டய்வின், ரூஸ்போல்டன், லார்ட் ப்ரேய் என வில்லன்களின் பட்டியலில் கொதித்தும் கிடந்த மனசு nightking பார்த்து பயப்பட தொடங்கியது. பதட்டத்தின் உச்சியில், போரில் ஜெயிக்க செய்த ஆர்யாவிற்கு நன்றி.

இந்த தொடரின்  இறுதிக்கட்டம் பலராலும் விமர்சிக்கப்பட்ட ஒன்று. பேரழிவை உண்டாக்கிய கலீசி ஜான் கரங்களாலேயே கொல்லப்படுவாள். அதற்கான தர்க்கபூர்வ காரணங்கள் இருந்தாலும் படைப்பின் வழக்கமான இறுதி மகிழ்ச்சியான நொடிகளைப் போல கலீசியையும், ஜானையும் சேர்த்து வைத்துப் பார்க்கவே விருப்பப்பட்டு விடுகிறோம். படைப்பில் கூடவா நிஜம் தேவை. தேவை தான் போல.
Game Of Thrones' Season 8, Episode 6 Review: A Good Series Finale ...
அரியணை ட்ராகன் தீயிற்கு இரையாகும். கலீசி கொல்லப்பட்டது அதனால் தான் என அதற்கும் தெரிந்திருக்கும் போல. 
Why Drogon destroyed the throne, and where he may have taken ...
கற்பனையும் நேர்மையான பாத்திர வடிவமைப்பும் கதைக்கு வலு செய்கின்றன.

தனிப்பட்ட முறையில் நான் அந்த ராஜ்ஜியத்தில் வாழ்ந்துப் பார்க்கவே பெரிதும் விரும்புகிறேன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இழப்பு (சிறுகதை)

மழையிருட்டு. மின்சாரம் தடைப்பட்டு போனது. நான்கு தெருக்கள் இருபுறமும். ஒன்றிணைக்கும் மையச் சாலை. கண்மாயை ஒட்டி இரண்டு வளைவு. மொத்த ஊருமே அவ்வளவு தான். ஒரு பெரிய கண்மாயின் பரப்பு கூட தேறாத நிலம். பதட்டம். சீதாவைச் சுத்தி இரண்டு மூணு பேரு மட்டுமே. “ஆம்பிளையாளுக யாரும் இல்லையா...” சாந்தியின் குரல் வளவு வாசலில் நீர் ஒழுகும் சத்தத்தை தாண்டி ஒலித்தது. கண்ணப்பனுக்கு பத்து வயது. தன்னுடைய தங்கச்சியை அம்மா சுமந்துக் கொண்டிருந்தாள். குழந்தை பிறக்கும் முன்பே தங்கச்சி தான் என்பதில் அவன் உறுதியாய் இருந்தான். பின்கட்டில் குடியிருக்கும் இலட்சுமி அக்கா வம்பிழுக்கும், “அது தம்பி பாப்பா டா”. அம்மாவும் விளையாட்டாய் ஆமோதிப்பாள். “இல்லை, அது தங்கச்சி பாப்பா தான்” என உறுதியாய் நிற்பான் கண்ணப்பன். லட்சுமி அக்காவும் கையைப் பிசைந்துக் கொண்டு அம்மாவின் கால்மாட்டுக்கு பக்கத்துல நின்றுக் கொண்டிருந்தாள். சாந்தி கண்ணப்பனைக் கூப்பிட்டு, “ஓடி போய் ஒத்தையண்ணன் வீட்டுல ஆளுக இருந்தா, அம்மாவுக்கு வலி வந்துருச்சுன்னு சொல்லி கூட்டிட்டு வாப்பா” என அனுப்பி வைத்தாள். நுனி கூர்மையாக இருக்கும் குடையை எடுத்துக் கொண்டு

பிறழ் உறவை எழுதுவது எதற்காக? - '57 சிநேகிதிகள்...' புத்தகத்தை முன்வைத்து ஒரு உரையாடல்...!

முன்குறிப்பு: வெகு நாட்களுக்கு பிறகு மீண்டும் பிளாக்கில் எழுதத் தொடங்கியிருக்கிறேன். வழக்கம் போல புது ஆண்டு பிறக்கும் போது உதித்து ஒரு திங்களுக்குள் மறையும் உறுதிமொழிகள் போல அல்லாமல் தொடர்ச்சியாக இந்த ஆண்டு செயல்பட வேண்டும் என நினைத்திருக்கிறேன்.  புத்தக வாசிப்பு சென்ற ஆண்டு நம்ப முடியாதளவுக்கு குறைந்திருக்கிறது. தனிப்பட்ட காரணங்கள் பல சொல்லலாம். ஆனாலும் அவை சமாளிப்புக்கு மட்டுமே உதவக் கூடும். இந்த ஆண்டு புதிதாக 1000 மணிநேர வாசிப்பு போட்டி ஒன்றில் இணைத்திருக்கிறேன். ஆரம்பித்து 10 நாட்கள் சென்றிருந்தாலும் நேற்று தான் தொடர்ச்சியாக 3 மணிநேரம் வாசிக்கக் கிடைத்தது. எழுத்தாளர் வா.மு.கோமுவின் நாவல் ஒன்றை ஒரே மூச்சில் வாசித்து முடித்தேன். அந்த நாவலை முன்வைத்தே இந்தக் குறிப்பை எழுதுகிறேன். இனி நீங்கள் தொடர்ச்சியாக நான் எழுதுவதை இங்கு வாசிக்கலாம். ஐம்பத்தேழு சிநேகிதிகள் சிநேகித்த புதினம்  எழுத்தாளர்: வா.மு.கோமு  உயிர்மை வெளியீடு முதற்பதிப்பு: டிசம்பர் 2022 பாலியல் சார்ந்த கதைகள் எழுதப்படுவதன் நோக்கம் என்ன? பாலியல் கதைகள் வெறும் கிளர்ச்சிக்கானவையா? அவை இலக்கியமாகுமா? வணிக இலக்கியம் என்பதற்கு நெரு

நட்சத்திரங்களுக்கும் நிலத்துக்குமான ராட்டினம்! - நட்சத்திரவாசிகள் நாவல் அனுபவம்

நாவல் அட்டைப்படம் | பதிப்பகம் காலச்சுவடு முன்குறிப்பு: நட்சத்திரவாசிகள் நாவலுக்காக எழுத்தாளர் கார்த்திக் பாலசுப்பிரமணியன் 2021 ஆம் ஆண்டுக்கான யுவபுரஸ்கார் விருதைப் பெற உள்ளார். அவரின் நூல் குறித்து கடந்த ஆண்டு ஏப்ரலில் நான் எழுதிய கட்டுரையை ஒரு விமர்சனப் போட்டிக்கு அனுப்பியிருந்தேன். போட்டி முடிவுகள் என்ன ஆனது எனத் தெரியவில்லை. ஒரு வருடத்திற்கு மேலாகிவிட்டது. அது போக தற்போது வெளிவந்திருக்கும் இந்த அறிவிப்பைக் காரணமாக வைத்து மெயிலின் அனுப்பிய அஞ்சலில் தூசி படித்திருந்த இந்தக் கட்டுரையை இங்கு பதிகிறேன். இந்தியாவின் தாராளமயமாக்கலுக்குப் பிறகு வளர்ந்த துறைகளில் தகவல் தொழில்நுட்பத் துறையும் ஒன்று. வேறு எந்த நாட்டை விடவும் இங்கு பரவலாக நிறுவப்பட, இந்திய சந்தையில் கிடைக்கிற இளைஞர்களின் திறனும் அவர்களுக்குக் கொடுக்க வேண்டியுள்ள மலிவான ஊதியமும் காரணிகளாக இருக்கின்றன. சில பத்தாண்டுகளில் இதன் வளர்ச்சி என்பது இந்தியாவின் நிகர பொருளாதார மதிப்பில் எட்டு விழுக்காட்டுக்கு நெருக்கத்தில் உள்ளது. நான்கு மில்லியன் இந்தியர்களின் வாழ்வாதரமாக மாறியுள்ளது. தவிர்க்க முடியாத சக்தியாக வளர்ந்து நிற்கும் இந்தத் து