சிதம்பர நினைவுகள் - பாலசந்திரன் சுள்ளிக்காடு (தமிழில் கே.வி.ஷைலஜா)
பகிர்வு:
"ஜீவிதம் மகா அற்புதமான ஒன்று
ஒருபோதும் எதிர்பார்க்காத ஏதோ ஒன்றை,
அது உங்களுக்காகப் பொத்தி வைத்துக் காத்திருக்கும்
எப்போதும்"
- பாலசந்திரன் சுள்ளிக்காடு
வாழ்ந்துப் பார்ப்பது மட்டும் தான் வாழ்க்கையைப் புரிந்துக் கொள்ள ஒரே வழி என்று குறிப்பிடும் பாலசந்திரன் வாழ்வின் இரகசியங்களை காலத்தில் அவை ஒளிந்து விளையாடும் மாயங்களைப் பதிந்து செல்கிறார்.
தொடர்வண்டி பயணமொன்றில் துணையாக படித்த சிதம்பர நினைவுகள் உலகைக் குறித்தும் மனிதர்களைக் குறித்துமான பார்வைகளை ஒரு முறை நினைவுப்படுத்திக் கொள்ள வாய்ப்பு கொடுத்திருக்கிறது.
பாலசந்திரன் மொழி அவரோடு நம்மையும் சேர்த்து பசியின் கொடுமையைத் தாளாது சாலையில் பரதேசியாக அலைபவனாகவும் கவிதைக்காகவும் கொள்கைக்காகவும் வீட்டைத் துறப்பவனாகவும் ஐந்து ரூபாய்க்கு சிவாஜி கணேசனின் பட விளம்பரத்தை வாசித்த பையன் 20 வருடங்களுக்குப் பிறகு அவர் கையாலே மது பரிமாறுவதை ஏற்கிறவனாகவும் இப்படியாக மகிழ்ச்சி, துயரம், சபலம், அவமானம், அன்பு, உறவு என வாழ்வை பிணைத்திருக்கும் சரடுகளோடு பயணிக்க வைக்கிறது.
மனிதர்களை மிகக் குறிப்பாக பெண்களை கடக்கிற அனுபவங்கள் நேர்மையோடு கடத்தப்படுகின்றன. பேருந்து எரிப்பு வழக்கில் குற்றவாளியாக்கப்பட்டு தனியார் பள்ளிக்கு மாறுகிறவர் அவமானங்களை பரிகாசங்களை எதிர் கொள்ளும் போது ஆதரவாக வகுப்பின் உள்ளிருந்து சிரிக்கும் சாரதாவின் நேர்மறை அலை, படகைக் கவிழ்த்து விடுவேன் என்று மிரட்டி சாஹினாவிடமிருந்து பெற்ற முத்தம் பின்னாளில் அவளின் தீக்காய முகத்தில் எதிர்பாராது திருப்பி கொடுத்தது, சபலத்தின் கட்டுகளினால் ஆட்பட்டதற்கு பலியாகிப் போன ஸ்ரீதேவி, ராதிகா, லைலா, பணத்தைக் கொடுக்காமல் இரவு ஏமாற்றப்பட்ட வேசி அன்போடு காலையில் கொடுத்து போன ஐந்து ரூபாய், மார்த்தா, அம்மா, அப்பா, தங்கை, மனைவி, மகன் என ஒரு மனிதன் கடக்க சாத்தியமான உயர்வு தாழ்வுகளை உணர்ச்சிபூர்வமாக முன்வைப்பதில் எவ்வித சுய பிரகடனமும் தென்படாதது பாலசந்திரனின் நிலைப்பாட்டைத் தெளிவாக்குகிறது.
சோர்ந்து போய் உலகின் மீதும் நமக்கான விதியின் மீதும் நம்பிக்கையிழக்கும் போது உலகம் அதை விடப் பெரிதானது என உணர்த்தும் தருணங்களை அறிமுகப்படுத்துகிறது சிதம்பர நினைவுகள்.
சிற்பங்களும், கல்தூண்களும், உயர்ந்த கோபுரமும் மறைந்து வயதான கிழவர் தான் இருக்கும் வரை கவனித்துக் கொள்ளத் துடிக்கும் மனைவியின் மீது கொண்டிருக்கும் தீராத அன்பின் சாட்சியை சொல்லும் முதல் கட்டுரையில் தொடங்கும் நூல், கமலாதாஸுக்கு ஸ்வீடிஷ் கவிஞர் ஷென் எஸ்ப்மெர்க் வெளிப்படுத்தும் அன்பின் பரிமாறுதல் பேசும் இறுதி கட்டுரையில் முடிவடைகிறது. இடைப்பட்ட 18 கட்டுரைகளிலும் வாழ்வின் பல நிறங்கள்.
ஒரு சுவாரசியமான மனிதனாக நான் பாலசந்திரனைப் பார்க்கிறேன். எல்லா நிலைகளிலும் வாழ்வின் மீதான அவரின் நிலைப்பாடும் எதிர்வினையும் மனிதர்களுக்கான பாடங்கள். தன் கண் முன்னே கடந்து போகும் இறப்புகள், அதன் பாதிப்புகள், நினைவுகள் எவ்வித சலனமுமற்றதாக உலகம் நிச்சயம் இருக்க போவதில்லை என்பதை உரக்கச் சொல்கிறது. அது மகா நடிகரான சிவாஜியாக இருக்கட்டும், கேரளத்து தெருக்களில் பரதேசியாக அலைந்த பாலசந்திரனாக இருக்கட்டும் நானாகவோ நீங்களாகவோ இருக்கட்டும் காலத்தின் அலைகளில் அடித்துச் செல்லும் கட்டைகளாக தான் இருக்கிறோம். நம் நினைவுகளே நமக்கான காலத்தைக் காட்டுகிறது.
மொழிப்பெயர்ப்பா என ஆச்சரியப்பட வைக்கிறது ஷைலஜா அவர்களின் நடை. சிதம்பர நினைவுகளில் தொலைந்துப் போன என்னை மீட்பதற்கு ஒரு தேநீர் தேவைப்பட்டது. உங்களுக்கு எப்படியோ!
"ஜீவிதம் மகா அற்புதமான ஒன்று
ஒருபோதும் எதிர்பார்க்காத ஏதோ ஒன்றை,
அது உங்களுக்காகப் பொத்தி வைத்துக் காத்திருக்கும்
எப்போதும்"
- பாலசந்திரன் சுள்ளிக்காடு
வாழ்ந்துப் பார்ப்பது மட்டும் தான் வாழ்க்கையைப் புரிந்துக் கொள்ள ஒரே வழி என்று குறிப்பிடும் பாலசந்திரன் வாழ்வின் இரகசியங்களை காலத்தில் அவை ஒளிந்து விளையாடும் மாயங்களைப் பதிந்து செல்கிறார்.
தொடர்வண்டி பயணமொன்றில் துணையாக படித்த சிதம்பர நினைவுகள் உலகைக் குறித்தும் மனிதர்களைக் குறித்துமான பார்வைகளை ஒரு முறை நினைவுப்படுத்திக் கொள்ள வாய்ப்பு கொடுத்திருக்கிறது.
பாலசந்திரன் மொழி அவரோடு நம்மையும் சேர்த்து பசியின் கொடுமையைத் தாளாது சாலையில் பரதேசியாக அலைபவனாகவும் கவிதைக்காகவும் கொள்கைக்காகவும் வீட்டைத் துறப்பவனாகவும் ஐந்து ரூபாய்க்கு சிவாஜி கணேசனின் பட விளம்பரத்தை வாசித்த பையன் 20 வருடங்களுக்குப் பிறகு அவர் கையாலே மது பரிமாறுவதை ஏற்கிறவனாகவும் இப்படியாக மகிழ்ச்சி, துயரம், சபலம், அவமானம், அன்பு, உறவு என வாழ்வை பிணைத்திருக்கும் சரடுகளோடு பயணிக்க வைக்கிறது.
சோர்ந்து போய் உலகின் மீதும் நமக்கான விதியின் மீதும் நம்பிக்கையிழக்கும் போது உலகம் அதை விடப் பெரிதானது என உணர்த்தும் தருணங்களை அறிமுகப்படுத்துகிறது சிதம்பர நினைவுகள்.
சிற்பங்களும், கல்தூண்களும், உயர்ந்த கோபுரமும் மறைந்து வயதான கிழவர் தான் இருக்கும் வரை கவனித்துக் கொள்ளத் துடிக்கும் மனைவியின் மீது கொண்டிருக்கும் தீராத அன்பின் சாட்சியை சொல்லும் முதல் கட்டுரையில் தொடங்கும் நூல், கமலாதாஸுக்கு ஸ்வீடிஷ் கவிஞர் ஷென் எஸ்ப்மெர்க் வெளிப்படுத்தும் அன்பின் பரிமாறுதல் பேசும் இறுதி கட்டுரையில் முடிவடைகிறது. இடைப்பட்ட 18 கட்டுரைகளிலும் வாழ்வின் பல நிறங்கள்.
ஒரு சுவாரசியமான மனிதனாக நான் பாலசந்திரனைப் பார்க்கிறேன். எல்லா நிலைகளிலும் வாழ்வின் மீதான அவரின் நிலைப்பாடும் எதிர்வினையும் மனிதர்களுக்கான பாடங்கள். தன் கண் முன்னே கடந்து போகும் இறப்புகள், அதன் பாதிப்புகள், நினைவுகள் எவ்வித சலனமுமற்றதாக உலகம் நிச்சயம் இருக்க போவதில்லை என்பதை உரக்கச் சொல்கிறது. அது மகா நடிகரான சிவாஜியாக இருக்கட்டும், கேரளத்து தெருக்களில் பரதேசியாக அலைந்த பாலசந்திரனாக இருக்கட்டும் நானாகவோ நீங்களாகவோ இருக்கட்டும் காலத்தின் அலைகளில் அடித்துச் செல்லும் கட்டைகளாக தான் இருக்கிறோம். நம் நினைவுகளே நமக்கான காலத்தைக் காட்டுகிறது.
மொழிப்பெயர்ப்பா என ஆச்சரியப்பட வைக்கிறது ஷைலஜா அவர்களின் நடை. சிதம்பர நினைவுகளில் தொலைந்துப் போன என்னை மீட்பதற்கு ஒரு தேநீர் தேவைப்பட்டது. உங்களுக்கு எப்படியோ!
கருத்துகள்
கருத்துரையிடுக