முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

முன் கூறப்பட்ட சாவின் சரித்திரம்- நாவலுடனான பயணங்கள்


முன் கூறப்பட்ட சாவின் சரித்திரம்

காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ் (Gabriel Garcia Marquez)

மொழிபெயர்ப்பு: அருமை செல்வம், அசதா

காலச்சுவடு @2016

(மாய எதார்த்தவாத இலக்கியங்களில் பெரிதும் அறியப்பட்ட எழுத்தாளர் காப்ரியேல் அவர்களின் ‘முன் கூறப்பட்ட சாவின் சரித்திரம்’ என்கிற நாவல் குறித்தான பகிர்வு)




     ஒரு நகரம் அது. அன்று திங்கட்கிழமை. கடந்த மூன்று நாட்களாக நடந்திருந்த கல்யாண ஆரவாரத்தின் முடிவுக்கும், காலை நிகழவிருந்த பிஷப் வருகைக்குமான இடைவெளியில் ஒரு கொலைக்கான திட்டமிடல் நடந்தேறுகிறது. பிஷப் வந்து சென்ற பிறகு கொலையும் நடந்தே முடிந்து விடுகிறது. அனேகமாக அவ்விடத்தில் இருந்த அனைவரும் கொலை குறித்து ஏதோவொரு வகையில் முன்பே அறிந்திருக்கின்றனர். அனைவரும் கொலை செய்ய முயற்சிப்பவர்கள் உட்பட அந்த கொலை நடைபெறாமல் இருக்கவே முயற்சிக்கின்றனர் தம்மளவில். எல்லாவற்றையும் மீறி நடந்தேறும் நிகழ்வின் பாதிப்பு கால் நூற்றாண்டுக்கும் மேலாக உயிர்ப்புடன் இருப்பது விதியின் பலத்தை பேச செய்கிறது.

     கொலை செய்யப்பட்டவனுக்கு நீண்ட கால நண்பன் அந்த கொலையோடு தொடர்புடைய எல்லோரையும் அவன் உட்பட, நினைவு பதிவுகளின் சேகரத்தை துருவி நீண்ட காலத்திற்கு பிறகு ஒரு முழு வடிவிலான பதிவை உருவாக்க விரும்புகிறான். அவனது பதிவே காப்ரியேலின் இந்நாவல்  ‘Chronicle of a Death Foretold’.


அவர்கள் அவனைக் கொல்ல இருந்த அன்று...

     இப்படியாக தான் நாவல் தொடங்குகிறது. சந்தியாகோ நாஸார் துருக்கியில் இருந்து இடம்பெயர்ந்து வந்த இப்ராஹீம் நாஸார் மகன். தந்தையின் இறப்பிற்கு பிறகு தங்களது பண்ணையை நிர்வகித்து வருகிறான். அவனது நெருங்கிய நண்பனான கதைசொல்லியின் அத்தை மகள் ஆங்கெலா விகாரியோவிற்கும் நகரத்திற்கு பெண் தேடுவதற்காகவே  ஆறு மாதங்களுக்கு முன்பு வந்த பயார்தோ சான் ரோமானிற்கும் திருமணம் நடைபெறுகிறது. கொலை நிகழும் நாளுக்கு முன்னிரவில் தான் திருமணம் முடிந்திருந்தது. அதன் கொண்டாட்டங்கள் விடியற்காலை வரை தொடர்கிறது.

     பயார்தோ சான் ரோமான் முதலிரவில் தன் மனைவி ஏற்கனவே கன்னி கழிந்திருப்பதை அறிகிறான்.  வறுமை குடும்பத்தை சேர்ந்தவளான அவளை மீண்டும் தாய் வீட்டிலேயே கொண்டு சென்று விட்டுவிடுகிறான். அவளது இரட்டை சகோதரர்கள் இதையறிந்து அதற்கு காரணம் யாரென இவளிடம் கேட்கிற போது சந்தியாகோவின் பெயரைக் குறிப்பிடுகிறாள். அவர்கள் இருவருக்குமே அப்படி நிகழ்ந்ததாக நாவலில் எந்த இடத்திலும் குறிப்பு இல்லை. யாருமே நம்பவும் மறுக்கின்றனர். ஏனெனில் இருவருக்கும் பொதுவாக எதுவுமே இல்லாத போது சாத்தியமே இல்லை என்கிற முடிவு ஏற்பட்டுவிடுகிறது.

     பின்னாளில் கதைசொல்லி அவளிடம் மீண்டும் மீண்டும் கேட்டபோதும் அவள் பிடிவாதமாக காரணத்தை கூற மறுத்துவிடுகிறாள்.

     சந்தியாகோவை கொல்ல விகாரியோவின் சகோதரர்கள் திட்டமிடுகின்றனர். அதுதான் தங்களது கவுரவதிற்க்கான செயல் என்றும் கருதுகிறார்கள். கிட்டதட்ட காலையிலில் இருந்து தாங்கள் பார்க்கும் அனைவரிடமும் கொல்ல போவதை சொல்லவும் செய்கிறார்கள்.

     மிகவும் நேர்மையானவர்களான சகோதரர்கள் சொல்லும் போது யாரும் நம்பவில்லை. ஆனாலும் ஏதோ நடக்க போகிறது என முன் அறிகின்றனர். சகோதரர்களே தங்களை யாராவது தடுத்திருந்தால் கொலை செய்திருக்க மாட்டார்களோ என எண்ணுமளவிற்கு தான் சந்தியாகோவின் வீட்டின் வாசல் அருகே காத்திருக்கின்றனர்.

     எல்லாவற்றையும் மீறி எல்லோரின் முயற்சியையும் மீறி நடப்பது நடந்தே தீரும் என்கிற கோட்டின் மீது காலம் நிகழ்வுகளை அடுக்குகிறது. முன் கதவில் கீறல்கள் தெரியுமளவிற்கு வெட்டுப்பட்ட சந்தியாகோ தன் வீட்டின் பின் வாசல் வழியாக சமையறையில் சென்று விழுந்து சாகிறான்.

   
  கொலையின் நிகழ்வுகளானது டாமினோ விளையாட்டை போல ஒவ்வொரு சீட்டும் அடுத்த இடைவெளியில் சீராக அடுக்கப்பட்டிருக்கிறது. அதில் ஒன்றை உருவினாலும் முழு விளைவினையும் நிறுத்தி விட முடியும். ஆனால் அதற்கான வாய்ப்புகளே இல்லாத அளவிற்கு கதையை கட்டியிருப்பது புனைவின் அபாரத்தை காட்டுகிறது. விதி என்பதும் அதுவே.

     கூர்மையான வருணனை, தெளிவான நடை, சுவாரசியம் கூட்டும் வகையில் நிகழ்வுகளைத் தொகுத்தளித்திருப்பது, வாசகனுக்கான அறிந்துக்கொள்ளல் இடைவெளியை அளித்திருப்பது, தவறவிட்ட வரிகளை ஒன்றோடொன்று இணைத்திருப்பது என நாவலின் பக்கங்களில் உறைந்திருக்கும் உத்திகள் புதிய அனுபவத்தை அளிக்கின்றன.

     அனால் இதுவொரு மர்ம நாவலாகவோ, துப்பறியும் நாவலாகவோ அமைவதற்கான எல்லா சாத்தியக் கூறுகளும் இருந்தபோதும் நினைவுகளுக்கான தொடர்புகளை அளிக்கும் இலக்கிய பதிவாக நாவல் உருப்பெறுகிறது.  

      ரோஜெர் மார்டின் டு கார்ட் தபால்காரன் நினைவில் வந்து போகிறான் நகர் மாந்தர்கள் குறித்த வர்ணிப்பில்.

     எதிர்பார்ப்புகளுக்கும் நிகழ்வுகளுக்கும் பிந்தைய விளைவுகளுக்குமான இடைவெளிகளின் பலவித பரிமாணங்களை உள்ளடக்கிய கதை சொல்லலே முன் கூறப்பட்ட சாவின் சரித்திரம். 

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இழப்பு (சிறுகதை)

மழையிருட்டு. மின்சாரம் தடைப்பட்டு போனது. நான்கு தெருக்கள் இருபுறமும். ஒன்றிணைக்கும் மையச் சாலை. கண்மாயை ஒட்டி இரண்டு வளைவு. மொத்த ஊருமே அவ்வளவு தான். ஒரு பெரிய கண்மாயின் பரப்பு கூட தேறாத நிலம். பதட்டம். சீதாவைச் சுத்தி இரண்டு மூணு பேரு மட்டுமே. “ஆம்பிளையாளுக யாரும் இல்லையா...” சாந்தியின் குரல் வளவு வாசலில் நீர் ஒழுகும் சத்தத்தை தாண்டி ஒலித்தது. கண்ணப்பனுக்கு பத்து வயது. தன்னுடைய தங்கச்சியை அம்மா சுமந்துக் கொண்டிருந்தாள். குழந்தை பிறக்கும் முன்பே தங்கச்சி தான் என்பதில் அவன் உறுதியாய் இருந்தான். பின்கட்டில் குடியிருக்கும் இலட்சுமி அக்கா வம்பிழுக்கும், “அது தம்பி பாப்பா டா”. அம்மாவும் விளையாட்டாய் ஆமோதிப்பாள். “இல்லை, அது தங்கச்சி பாப்பா தான்” என உறுதியாய் நிற்பான் கண்ணப்பன். லட்சுமி அக்காவும் கையைப் பிசைந்துக் கொண்டு அம்மாவின் கால்மாட்டுக்கு பக்கத்துல நின்றுக் கொண்டிருந்தாள். சாந்தி கண்ணப்பனைக் கூப்பிட்டு, “ஓடி போய் ஒத்தையண்ணன் வீட்டுல ஆளுக இருந்தா, அம்மாவுக்கு வலி வந்துருச்சுன்னு சொல்லி கூட்டிட்டு வாப்பா” என அனுப்பி வைத்தாள். நுனி கூர்மையாக இருக்கும் குடையை எடுத்துக் கொண்டு

பிறழ் உறவை எழுதுவது எதற்காக? - '57 சிநேகிதிகள்...' புத்தகத்தை முன்வைத்து ஒரு உரையாடல்...!

முன்குறிப்பு: வெகு நாட்களுக்கு பிறகு மீண்டும் பிளாக்கில் எழுதத் தொடங்கியிருக்கிறேன். வழக்கம் போல புது ஆண்டு பிறக்கும் போது உதித்து ஒரு திங்களுக்குள் மறையும் உறுதிமொழிகள் போல அல்லாமல் தொடர்ச்சியாக இந்த ஆண்டு செயல்பட வேண்டும் என நினைத்திருக்கிறேன்.  புத்தக வாசிப்பு சென்ற ஆண்டு நம்ப முடியாதளவுக்கு குறைந்திருக்கிறது. தனிப்பட்ட காரணங்கள் பல சொல்லலாம். ஆனாலும் அவை சமாளிப்புக்கு மட்டுமே உதவக் கூடும். இந்த ஆண்டு புதிதாக 1000 மணிநேர வாசிப்பு போட்டி ஒன்றில் இணைத்திருக்கிறேன். ஆரம்பித்து 10 நாட்கள் சென்றிருந்தாலும் நேற்று தான் தொடர்ச்சியாக 3 மணிநேரம் வாசிக்கக் கிடைத்தது. எழுத்தாளர் வா.மு.கோமுவின் நாவல் ஒன்றை ஒரே மூச்சில் வாசித்து முடித்தேன். அந்த நாவலை முன்வைத்தே இந்தக் குறிப்பை எழுதுகிறேன். இனி நீங்கள் தொடர்ச்சியாக நான் எழுதுவதை இங்கு வாசிக்கலாம். ஐம்பத்தேழு சிநேகிதிகள் சிநேகித்த புதினம்  எழுத்தாளர்: வா.மு.கோமு  உயிர்மை வெளியீடு முதற்பதிப்பு: டிசம்பர் 2022 பாலியல் சார்ந்த கதைகள் எழுதப்படுவதன் நோக்கம் என்ன? பாலியல் கதைகள் வெறும் கிளர்ச்சிக்கானவையா? அவை இலக்கியமாகுமா? வணிக இலக்கியம் என்பதற்கு நெரு

நட்சத்திரங்களுக்கும் நிலத்துக்குமான ராட்டினம்! - நட்சத்திரவாசிகள் நாவல் அனுபவம்

நாவல் அட்டைப்படம் | பதிப்பகம் காலச்சுவடு முன்குறிப்பு: நட்சத்திரவாசிகள் நாவலுக்காக எழுத்தாளர் கார்த்திக் பாலசுப்பிரமணியன் 2021 ஆம் ஆண்டுக்கான யுவபுரஸ்கார் விருதைப் பெற உள்ளார். அவரின் நூல் குறித்து கடந்த ஆண்டு ஏப்ரலில் நான் எழுதிய கட்டுரையை ஒரு விமர்சனப் போட்டிக்கு அனுப்பியிருந்தேன். போட்டி முடிவுகள் என்ன ஆனது எனத் தெரியவில்லை. ஒரு வருடத்திற்கு மேலாகிவிட்டது. அது போக தற்போது வெளிவந்திருக்கும் இந்த அறிவிப்பைக் காரணமாக வைத்து மெயிலின் அனுப்பிய அஞ்சலில் தூசி படித்திருந்த இந்தக் கட்டுரையை இங்கு பதிகிறேன். இந்தியாவின் தாராளமயமாக்கலுக்குப் பிறகு வளர்ந்த துறைகளில் தகவல் தொழில்நுட்பத் துறையும் ஒன்று. வேறு எந்த நாட்டை விடவும் இங்கு பரவலாக நிறுவப்பட, இந்திய சந்தையில் கிடைக்கிற இளைஞர்களின் திறனும் அவர்களுக்குக் கொடுக்க வேண்டியுள்ள மலிவான ஊதியமும் காரணிகளாக இருக்கின்றன. சில பத்தாண்டுகளில் இதன் வளர்ச்சி என்பது இந்தியாவின் நிகர பொருளாதார மதிப்பில் எட்டு விழுக்காட்டுக்கு நெருக்கத்தில் உள்ளது. நான்கு மில்லியன் இந்தியர்களின் வாழ்வாதரமாக மாறியுள்ளது. தவிர்க்க முடியாத சக்தியாக வளர்ந்து நிற்கும் இந்தத் து