முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அடைபடும் நாட்குறிப்புகள்-1




அண்டத்தை துலாக்கோலின் கம்பி போல நீட்டித்தால் அதன் ஒரு முனையை நான் பற்றியிருக்க மறு முனையில் எனது ஆதங்கங்கள், கவலைகள், சோர்வுகள், எதிர்பார்ப்புகள், கிட்டாத உவகைகள் என எல்லாமும் அழுத்திக் கொண்டிருக்க, பாரம் தாங்காது என் முனை அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறது. நானும் முடிந்தளவு அழுத்தம் கொடுத்த போதும் சிறு அசைவு கூட இல்லை மறுமுனையில்.

கரடிகளின் தாக்கத்தால் இறங்கிக் கொண்டிருக்கும் பங்கு மதிப்பு வரைபடத்தில் பாதாளம் நோக்கிய புள்ளியில் என் உணர்ச்சிகள் பேயை போல் நிற்கின்றன. மறுமுனையில் எளிய என் உரு நிழலின் எடையை ஒத்திருக்கிறது.

சொல்லி தீராத நாட்குறிப்பின் பக்கங்களில் முதல் பத்தியை மேற்கண்டவாறு தொடங்குகிறேன்.

கல்லூரி காணாத நாள் இன்று. நேற்றைய நாளின் கொடூரம் இன்றைய காலையை இருளுக்கு உள்ளாக்கியது. பொழுது விடிகையில் எழாத உடல் பொழுதெல்லாம் உற்சாகத்தோடு இருக்கும் என்று எதிர்பார்ப்பதற்கில்லை.

முதல் வேலையை ஓரளவு நிறைவோடு செய்து முடித்தேன். பிற்பகலில் தூறிய ஓரளவு மழையைப் போல. சூரியன் ஒளிந்துக் கொண்ட நாட்களில் இன்றும் சேரும்.

அம்ருதா இதழில் பர்மா குறித்து மு.இராசேந்திரன் எழுதிய கட்டுரை ஒன்றை வாசித்தேன். ஏதோவொன்று என்னை அத்தோடு பிணைத்துக் கொண்டுள்ளது. எனது பெரியய்யா வாழ்ந்த நிலம் .

ஹால என்கிற மொழிபெயர்ப்பு நாவலில் நான்கில் ஒரு பங்கு பக்கங்களைப் படித்தேன். ஹால என்றால் ஆண்மைக் குறைவு என்று பொருள். மூன்றாவது திருமணம் செய்த பிறகு இந்த பாதிப்புக்குள்ளாகிறான் அச் செல்வந்தன். மூன்று பெண்டாட்டிகள், பதினொரு பிள்ளைகள், அவன் மற்றும் ஆப்பிரிக்க - இஸ்லாமிய செல்வந்த நிலை - இவற்றை நாவல் பேசுகிறது.

புதிய பணியோடு தொடர்புடைய அலுவலகம் சென்றேன். சீரான மனிதரைச் சந்தித்தேன்.

செய்ய மறந்த வேலைகளின் அழுத்தத்தை உணர்கிறேன். நேர மேலாண்மையின் அவசியம் தவறுகையில் இத்தகு நிலையில் தத்தளிக்கிறேன்.

(நாட்குறிப்பு தேதி 16,அக்.2018 06:00 பி.ப.)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இழப்பு (சிறுகதை)

மழையிருட்டு. மின்சாரம் தடைப்பட்டு போனது. நான்கு தெருக்கள் இருபுறமும். ஒன்றிணைக்கும் மையச் சாலை. கண்மாயை ஒட்டி இரண்டு வளைவு. மொத்த ஊருமே அவ்வளவு தான். ஒரு பெரிய கண்மாயின் பரப்பு கூட தேறாத நிலம். பதட்டம். சீதாவைச் சுத்தி இரண்டு மூணு பேரு மட்டுமே. “ஆம்பிளையாளுக யாரும் இல்லையா...” சாந்தியின் குரல் வளவு வாசலில் நீர் ஒழுகும் சத்தத்தை தாண்டி ஒலித்தது. கண்ணப்பனுக்கு பத்து வயது. தன்னுடைய தங்கச்சியை அம்மா சுமந்துக் கொண்டிருந்தாள். குழந்தை பிறக்கும் முன்பே தங்கச்சி தான் என்பதில் அவன் உறுதியாய் இருந்தான். பின்கட்டில் குடியிருக்கும் இலட்சுமி அக்கா வம்பிழுக்கும், “அது தம்பி பாப்பா டா”. அம்மாவும் விளையாட்டாய் ஆமோதிப்பாள். “இல்லை, அது தங்கச்சி பாப்பா தான்” என உறுதியாய் நிற்பான் கண்ணப்பன். லட்சுமி அக்காவும் கையைப் பிசைந்துக் கொண்டு அம்மாவின் கால்மாட்டுக்கு பக்கத்துல நின்றுக் கொண்டிருந்தாள். சாந்தி கண்ணப்பனைக் கூப்பிட்டு, “ஓடி போய் ஒத்தையண்ணன் வீட்டுல ஆளுக இருந்தா, அம்மாவுக்கு வலி வந்துருச்சுன்னு சொல்லி கூட்டிட்டு வாப்பா” என அனுப்பி வைத்தாள். நுனி கூர்மையாக இருக்கும் குடையை எடுத்துக் கொண்டு

பிறழ் உறவை எழுதுவது எதற்காக? - '57 சிநேகிதிகள்...' புத்தகத்தை முன்வைத்து ஒரு உரையாடல்...!

முன்குறிப்பு: வெகு நாட்களுக்கு பிறகு மீண்டும் பிளாக்கில் எழுதத் தொடங்கியிருக்கிறேன். வழக்கம் போல புது ஆண்டு பிறக்கும் போது உதித்து ஒரு திங்களுக்குள் மறையும் உறுதிமொழிகள் போல அல்லாமல் தொடர்ச்சியாக இந்த ஆண்டு செயல்பட வேண்டும் என நினைத்திருக்கிறேன்.  புத்தக வாசிப்பு சென்ற ஆண்டு நம்ப முடியாதளவுக்கு குறைந்திருக்கிறது. தனிப்பட்ட காரணங்கள் பல சொல்லலாம். ஆனாலும் அவை சமாளிப்புக்கு மட்டுமே உதவக் கூடும். இந்த ஆண்டு புதிதாக 1000 மணிநேர வாசிப்பு போட்டி ஒன்றில் இணைத்திருக்கிறேன். ஆரம்பித்து 10 நாட்கள் சென்றிருந்தாலும் நேற்று தான் தொடர்ச்சியாக 3 மணிநேரம் வாசிக்கக் கிடைத்தது. எழுத்தாளர் வா.மு.கோமுவின் நாவல் ஒன்றை ஒரே மூச்சில் வாசித்து முடித்தேன். அந்த நாவலை முன்வைத்தே இந்தக் குறிப்பை எழுதுகிறேன். இனி நீங்கள் தொடர்ச்சியாக நான் எழுதுவதை இங்கு வாசிக்கலாம். ஐம்பத்தேழு சிநேகிதிகள் சிநேகித்த புதினம்  எழுத்தாளர்: வா.மு.கோமு  உயிர்மை வெளியீடு முதற்பதிப்பு: டிசம்பர் 2022 பாலியல் சார்ந்த கதைகள் எழுதப்படுவதன் நோக்கம் என்ன? பாலியல் கதைகள் வெறும் கிளர்ச்சிக்கானவையா? அவை இலக்கியமாகுமா? வணிக இலக்கியம் என்பதற்கு நெரு

நட்சத்திரங்களுக்கும் நிலத்துக்குமான ராட்டினம்! - நட்சத்திரவாசிகள் நாவல் அனுபவம்

நாவல் அட்டைப்படம் | பதிப்பகம் காலச்சுவடு முன்குறிப்பு: நட்சத்திரவாசிகள் நாவலுக்காக எழுத்தாளர் கார்த்திக் பாலசுப்பிரமணியன் 2021 ஆம் ஆண்டுக்கான யுவபுரஸ்கார் விருதைப் பெற உள்ளார். அவரின் நூல் குறித்து கடந்த ஆண்டு ஏப்ரலில் நான் எழுதிய கட்டுரையை ஒரு விமர்சனப் போட்டிக்கு அனுப்பியிருந்தேன். போட்டி முடிவுகள் என்ன ஆனது எனத் தெரியவில்லை. ஒரு வருடத்திற்கு மேலாகிவிட்டது. அது போக தற்போது வெளிவந்திருக்கும் இந்த அறிவிப்பைக் காரணமாக வைத்து மெயிலின் அனுப்பிய அஞ்சலில் தூசி படித்திருந்த இந்தக் கட்டுரையை இங்கு பதிகிறேன். இந்தியாவின் தாராளமயமாக்கலுக்குப் பிறகு வளர்ந்த துறைகளில் தகவல் தொழில்நுட்பத் துறையும் ஒன்று. வேறு எந்த நாட்டை விடவும் இங்கு பரவலாக நிறுவப்பட, இந்திய சந்தையில் கிடைக்கிற இளைஞர்களின் திறனும் அவர்களுக்குக் கொடுக்க வேண்டியுள்ள மலிவான ஊதியமும் காரணிகளாக இருக்கின்றன. சில பத்தாண்டுகளில் இதன் வளர்ச்சி என்பது இந்தியாவின் நிகர பொருளாதார மதிப்பில் எட்டு விழுக்காட்டுக்கு நெருக்கத்தில் உள்ளது. நான்கு மில்லியன் இந்தியர்களின் வாழ்வாதரமாக மாறியுள்ளது. தவிர்க்க முடியாத சக்தியாக வளர்ந்து நிற்கும் இந்தத் து