காணும் இடமெல்லாம் நீலம். பேரமைதியை அணிந்திருக்கிற கடலின் முகமெல்லாம் நீலம். விரிந்திருக்கும் அதன் எல்லையில் தொடங்கி மேலெழும் வானமெங்கிலும் நீலம். சூரியன் மறைந்த பிறகும் மீதமிருக்கும் வெளிச்சத்தில் இதமான கடற்காற்றின் குளிரில் கடலுக்கு பத்து அடிக்கு மேலிருந்து தடதடக்கும் தொடர்வண்டியின் கதவோரம் மிகச் சரியாக பத்து நிமிடங்கள் நேரம் செலவழிக்க நீங்கள் தயாராக இருந்தால் பதிலீடாக பெருவியப்பினையும் இயற்கையின் மீதான பெரும்நம்பிக்கையையும் நாம் தான் இயற்கை, இயற்கை தான் நாம் என்பதனையும் உணர முடியும். தமிழ்நாட்டின் மண்டபம் பகுதியிலிருந்து இராமேஸ்வரத்தை இணைக்கும் பாம்பன் பாலத்தில் தான் அந்த பயணம். தமிழ்நாட்டின் நிலப்பரப்பிலிருந்து இராமேஸ்வரத்தை கடல் துண்டித்திருப்பினும் மொழி இணைத்திருக்கிறது. இந்த வாக்கியம் சரியா என எனக்கே குழப்பமாக இருக்கிறது. பலகைகளில் தொடங்கி முகங்கள் வரை தமிழைத் தேட வேண்டிய நிலை தான். கோவிலின் தரையெங்கும் வடமொழி வாசகங்கள். பலகை அனைத்திலும் தமிழுக்கும் சிறிதும் இடம் உண்டு. சுற்றி சுற்றி மடங்கள். இராமேஸ்வரத்தினை இரண்டாக வகுந்து விட முடியும். புனித (?) தலம் ம
முகிழத் தொடங்கும் அரும்பின் சிறுநகை