முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நட்பின் பயணம்


எத்தனையோ முறை நட்பு என்கிற சொல் என்னால் எள்ளி நகையாடப்பட்டிருக்கிறது. பல முறை உண்மையான நட்பு என்பதை அலட்சியப்படுத்திருக்கிறேன். நண்பர்கள் குறித்து எவ்வித அக்கறையும் இல்லாதவனாய் நானிருந்திருக்கிறேன் என்பது எனக்கே கடினமான ஒன்றாக தோன்றுகிறது இன்று.

அப்படி என்ன நடந்து விட்டது... உண்மையான நட்பின் ஆசுவாசத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறேன். அந்த கதகதப்பு என்னை ஆறுதலாய் உணர வைக்கிறது. என்ன தவம் செய்தாயோ என புலம்ப வைக்கிறது.

காற்றில் எழும் சங்கீதம் செவியில் அறைந்தால் தானே இசை. இந்த செவிடனுக்கு உணர்த்தும் விதமாய் அறைந்து அறிவிக்கப்பட்டிருக்கிறது நட்பெனும் முரசு.

அலைகடல் எல்லாம் எனக்காகவே பொங்கி கொண்டிருக்கிறது. நிலவொளி எங்கும் எனக்காகவே படர்ந்து கொண்டிருக்கிறது. என் உணர்வுகளை கடத்தவே பனி உங்களையும் போர்த்தியிருக்கிறது.

வீதியெங்கும் அலறிக் கொண்டே ஓட வேண்டும் போல தோன்றுகிறது. இது ஒரு வகையான புது உணர்வாய் தோன்றுகிறது.

ஏதோவொரு மைய விசை பிணைத்து இணைத்து வேடிக்கை பார்க்கிறது. ஒரு நேரம் சிரிக்கவும் ஒரு நேரம் அழவும் ஒரு நேரம் கோபப்படவும் ஒரு நேரம் அணைக்கவும் செய்ய சொல்கிறது, உடலில் கோர்க்கப்பட்ட நூலின் அசைவுக்கு நாட்டியம் ஆடும் மரப்பாச்சிகளைப் போல.

சிரித்து சிரித்து அழுகிறேன். அழுது அழுது சிரிக்கிறேன். சீன தத்துவப்படி நன்மை முற்றினால் தீமை என்பது போலவோ!

என் இனிய நட்பே, என்னை என்னவெல்லாம் செய்திருக்கிறது பார் உன் ஒரு சொட்டு கண்ணீர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

முன் கூறப்பட்ட சாவின் சரித்திரம்- நாவலுடனான பயணங்கள்

முன் கூறப்பட்ட சாவின் சரித்திரம் காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ் ( Gabriel Garcia Marquez) மொழிபெயர்ப்பு: அருமை செல்வம் , அசதா காலச்சுவடு @2016 (மாய எதார்த்தவாத இலக்கியங்களில் பெரிதும் அறியப்பட்ட எழுத்தாளர் காப்ரியேல் அவர்களின் ‘முன் கூறப்பட்ட சாவின் சரித்திரம்’ என்கிற நாவல் குறித்தான பகிர்வு)      ஒரு நகரம் அது. அன்று திங்கட்கிழமை. கடந்த மூன்று நாட்களாக நடந்திருந்த கல்யாண ஆரவாரத்தின் முடிவுக்கும், காலை நிகழவிருந்த பிஷப் வருகைக்குமான இடைவெளியில் ஒரு கொலைக்கான திட்டமிடல் நடந்தேறுகிறது. பிஷப் வந்து சென்ற பிறகு கொலையும் நடந்தே முடிந்து விடுகிறது. அனேகமாக அவ்விடத்தில் இருந்த அனைவரும் கொலை குறித்து ஏதோவொரு வகையில் முன்பே அறிந்திருக்கின்றனர். அனைவரும் கொலை செய்ய முயற்சிப்பவர்கள் உட்பட அந்த கொலை நடைபெறாமல் இருக்கவே முயற்சிக்கின்றனர் தம்மளவில். எல்லாவற்றையும் மீறி நடந்தேறும் நிகழ்வின் பாதிப்பு கால் நூற்றாண்டுக்கும் மேலாக உயிர்ப்புடன் இருப்பது விதியின் பலத்தை பேச செய்கிறது.      கொலை செய்யப்பட்டவனுக்கு நீண்ட கால நண்பன் அந்த கொலையோ...

பேரன்பாளனின் சாலை!

இரு விழிகள். முடிவுகளற்ற சுழல் பாதை போல இருமை சூழ்ந்து அதன் மாய வலைக்குள் ஈயை போல் சிக்க வைக்க முயற்சிக்கின்றன. மேலும் கீழும் தீட்டப்பட்ட கருப்பு பட்டைகள் என்னை மட்டும் நோக்கு என கவனக்குவியலைத் தன்வயப்படுத்துகின்றன. மிக கூர்மையான மூக்கின் பக்கவாட்டுத் தோற்றம் சாலையோர பூங்காவினை விட்டு செல்ல மனமில்லாது பொழுது சாய்ந்த பின்னும் விளையாடிக் கொண்டிருக்கும் சிறுவன் அம்மா வேலை முடித்து அழைத்து செல்ல கூப்பிடும்போது 'ஒரு தடவ' என கடைசியாக விளையாடிய சறுக்கு பலகையை ஒத்திருக்கிறது. நான் அச்சிறுவன். கவனமாக உருண்டு வரும் நீர்த்துளிகளில் ஒன்று மட்டும் சிறிது அழுத்தத்தோடு விழுந்துவிட்டதால் பதிந்த பள்ளம் போலான சிறு குழி மூக்கிற்கும் இதழ்களுக்கும் நடு மையத்தில். இதழ்கள் துருத்திக் கொண்டிருக்க இலாவகம், இருப்பதிலேயே மிக உயரமான மலைமுகட்டின் சிறு நுனியில் தொங்கி கொண்டிருந்தாலும் பற்றிக் கொள்ளும் அளவுக்கு பிளவுகளை வழங்கும் இயற்கையின் கருணையை நிரவியது போலான தோற்றத்தை அளித்துவிடுகிறது. வடிவங்களுக்கு அப்பாற்பட்டது இயற்கை. இயற்கைக்கு உட்பட்டது அழகு. கவிஞர்களை நம்பாதே. பேரன்புக்காரன் பயணிக்கும் சாலையில் ...

ஒரு கடிதம்

அன்பின் பிரபாவுக்கு ,      நீ நலமாக இருப்பாய் என நம்புகிறேன். இந்த நாட்களின் அழுத்தத்தில் இருந்து விலகி நிற்கும் வழி தெரியாமல் இருந்த எனக்கு உன் குறுஞ்செய்தி சிறிது விடுதலை தந்தது. ஒற்றை அறைக்குள் எதிரொலிக்கும் என் மனதில் இருந்து எழும் ஓசை அச்சம் கொடுக்கிறது. சமூக வலைத்தளங்கள், செய்தி நேரலை எதுவும் உவப்பானதாக இல்லை. வாசிப்பது மட்டுமே இப்போதான ஆறுதல். அதிலும் முழு மனதாக இணைய இயலாமல் அந்தக் கதையினை இந்தச் சூழலுக்கு பொருத்திப் பார்த்து உடைந்து போகிறேன்.       உதாரணத்திற்கு சொல்கிறேன். நோர்வீஜியன் வுட் அத்தியாயங்களில் டோருவும் நவோகாவும் நடந்து போகிற தருணங்களில் அவர்களுக்கு முக கவசம் அணிந்ததாக நானே கற்பனை செய்துக் கொள்கிறேன். நவோகா சிகிச்சைக்காக தனித்து இருப்பது அவளை தனிமைப்படுத்தும் அசாதாரண சூழல்- கிருமிகளால் விளைந்தது என அச்சம் கொள்கிறேன். மிடோரியைத் தொடாது இருக்க டோருவை நானே விலக்கி வைக்கிறேன். என்னால் புரிந்துக் கொள்ள முடிகிறது எனது அதீத அச்சமும் பதட்டமுமே இதற்கு காரணம் என்று. சோர்ந்து விழுகிறேன்.      உன்னோடு...