முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வியர்வையால் நிரம்பும் சுவர்கள்


செவப்பு கல் அருகே
இன்னுமொரு
செவப்பு கல்
மற்றுமொரு
செவப்பு கல்
இன்னும் ஒன்று
அடுத்து ஒன்று
அடுக்கி கொண்டே
நகர்கிறார்
ஒவ்வொன்றுக்கும்
இடையே
ஒரே மாதிரியான
இடைவெளியை
அனுமதித்த படி

மண்ணும் சிமண்டும்
கலந்த குவியலை
அகண்ட தட்டில்
கொஞ்சம்
அள்ளிக் கொண்டு
தனது
கூம்பு கரண்டியை
வலக்கையில்
தாங்கியவாறு
செவப்பு கற்களுக்கிடையே
அரக்கை நிரப்பியும்
பூசியும் தடவியும்
நகர்கிறார்
மேல் வரிசை
அடுக்க

வெட்டப்பட்ட நூலொன்று
சரியாய் கட்டப்பட்டிருக்கிறது
சீராய் கட்டடம்
எழுப்ப

அடிக்கொருதரம் டேப்பை
நீட்டி அளக்கிறார்
இடுப்பளவு
வரை எழுந்து நிற்கும்
குட்டிச்சுவர்
சிரித்துக் கொண்டே
மேல்நோக்குகிறது

பொழியும் வெய்யில்
வியர்வையை வழியச்
செய்கிறது
கண்டுகொள்ளாம
தனது வேலையை
செய்பவரின்
கிழிந்த பனியனில்
படிந்திருக்கிறது
வியர்வை காய்ந்த பின்
தேங்கும் உப்பு

சூரியன் மேற்கே
திசை மாற
அவர் நிழல்
கிழக்கே சாய்கிறது

சூடான தேநீரால்
நிரம்பிய வயிறு
மீண்டும் ஏறச் சொல்கிறது
சுவர்களுக்கிடையே
இன்னிக்கான வேலை நேரம்
முடியப் போவதற்கான
அறிகுறியுடன்
முடிக்க வேண்டிய
வேலைகளின் நினைவுடன்

வானத்தை நோக்குகிறார்
கலைந்த மேகங்களில்
ஊடுருவும் செங்கதிர்கள்
அடுக்கியிருந்த செங்கற்களின்
கீழ் சிதறியிருந்த
நிறத்தை
ஒத்திருக்கிறதோ

சீரான வீடு கட்ட
சிந்தும் வியர்வை
அவ்வீட்டிற்கானது
மட்டுமல்ல
சிதிலமடைந்த தன்
வீட்டின் தேவை
நிரப்பவும் தான்

நீரில் முகம் கழுவி
சிமிண்ட் படிந்த
லுங்கியை
இறக்கிவிட்டு
சோறு கொண்டுவந்த
கூடையை
பற்றிக்கொண்டு
கிளம்புகிறார்
திரும்பி பார்க்காமல்

எழுந்த கட்டிடம்
நோக்கி கொண்டேயிருக்கிறது
அவர் திசை

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

முன் கூறப்பட்ட சாவின் சரித்திரம்- நாவலுடனான பயணங்கள்

முன் கூறப்பட்ட சாவின் சரித்திரம் காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ் ( Gabriel Garcia Marquez) மொழிபெயர்ப்பு: அருமை செல்வம் , அசதா காலச்சுவடு @2016 (மாய எதார்த்தவாத இலக்கியங்களில் பெரிதும் அறியப்பட்ட எழுத்தாளர் காப்ரியேல் அவர்களின் ‘முன் கூறப்பட்ட சாவின் சரித்திரம்’ என்கிற நாவல் குறித்தான பகிர்வு)      ஒரு நகரம் அது. அன்று திங்கட்கிழமை. கடந்த மூன்று நாட்களாக நடந்திருந்த கல்யாண ஆரவாரத்தின் முடிவுக்கும், காலை நிகழவிருந்த பிஷப் வருகைக்குமான இடைவெளியில் ஒரு கொலைக்கான திட்டமிடல் நடந்தேறுகிறது. பிஷப் வந்து சென்ற பிறகு கொலையும் நடந்தே முடிந்து விடுகிறது. அனேகமாக அவ்விடத்தில் இருந்த அனைவரும் கொலை குறித்து ஏதோவொரு வகையில் முன்பே அறிந்திருக்கின்றனர். அனைவரும் கொலை செய்ய முயற்சிப்பவர்கள் உட்பட அந்த கொலை நடைபெறாமல் இருக்கவே முயற்சிக்கின்றனர் தம்மளவில். எல்லாவற்றையும் மீறி நடந்தேறும் நிகழ்வின் பாதிப்பு கால் நூற்றாண்டுக்கும் மேலாக உயிர்ப்புடன் இருப்பது விதியின் பலத்தை பேச செய்கிறது.      கொலை செய்யப்பட்டவனுக்கு நீண்ட கால நண்பன் அந்த கொலையோ...

பேரன்பாளனின் சாலை!

இரு விழிகள். முடிவுகளற்ற சுழல் பாதை போல இருமை சூழ்ந்து அதன் மாய வலைக்குள் ஈயை போல் சிக்க வைக்க முயற்சிக்கின்றன. மேலும் கீழும் தீட்டப்பட்ட கருப்பு பட்டைகள் என்னை மட்டும் நோக்கு என கவனக்குவியலைத் தன்வயப்படுத்துகின்றன. மிக கூர்மையான மூக்கின் பக்கவாட்டுத் தோற்றம் சாலையோர பூங்காவினை விட்டு செல்ல மனமில்லாது பொழுது சாய்ந்த பின்னும் விளையாடிக் கொண்டிருக்கும் சிறுவன் அம்மா வேலை முடித்து அழைத்து செல்ல கூப்பிடும்போது 'ஒரு தடவ' என கடைசியாக விளையாடிய சறுக்கு பலகையை ஒத்திருக்கிறது. நான் அச்சிறுவன். கவனமாக உருண்டு வரும் நீர்த்துளிகளில் ஒன்று மட்டும் சிறிது அழுத்தத்தோடு விழுந்துவிட்டதால் பதிந்த பள்ளம் போலான சிறு குழி மூக்கிற்கும் இதழ்களுக்கும் நடு மையத்தில். இதழ்கள் துருத்திக் கொண்டிருக்க இலாவகம், இருப்பதிலேயே மிக உயரமான மலைமுகட்டின் சிறு நுனியில் தொங்கி கொண்டிருந்தாலும் பற்றிக் கொள்ளும் அளவுக்கு பிளவுகளை வழங்கும் இயற்கையின் கருணையை நிரவியது போலான தோற்றத்தை அளித்துவிடுகிறது. வடிவங்களுக்கு அப்பாற்பட்டது இயற்கை. இயற்கைக்கு உட்பட்டது அழகு. கவிஞர்களை நம்பாதே. பேரன்புக்காரன் பயணிக்கும் சாலையில் ...

ஒரு கடிதம்

அன்பின் பிரபாவுக்கு ,      நீ நலமாக இருப்பாய் என நம்புகிறேன். இந்த நாட்களின் அழுத்தத்தில் இருந்து விலகி நிற்கும் வழி தெரியாமல் இருந்த எனக்கு உன் குறுஞ்செய்தி சிறிது விடுதலை தந்தது. ஒற்றை அறைக்குள் எதிரொலிக்கும் என் மனதில் இருந்து எழும் ஓசை அச்சம் கொடுக்கிறது. சமூக வலைத்தளங்கள், செய்தி நேரலை எதுவும் உவப்பானதாக இல்லை. வாசிப்பது மட்டுமே இப்போதான ஆறுதல். அதிலும் முழு மனதாக இணைய இயலாமல் அந்தக் கதையினை இந்தச் சூழலுக்கு பொருத்திப் பார்த்து உடைந்து போகிறேன்.       உதாரணத்திற்கு சொல்கிறேன். நோர்வீஜியன் வுட் அத்தியாயங்களில் டோருவும் நவோகாவும் நடந்து போகிற தருணங்களில் அவர்களுக்கு முக கவசம் அணிந்ததாக நானே கற்பனை செய்துக் கொள்கிறேன். நவோகா சிகிச்சைக்காக தனித்து இருப்பது அவளை தனிமைப்படுத்தும் அசாதாரண சூழல்- கிருமிகளால் விளைந்தது என அச்சம் கொள்கிறேன். மிடோரியைத் தொடாது இருக்க டோருவை நானே விலக்கி வைக்கிறேன். என்னால் புரிந்துக் கொள்ள முடிகிறது எனது அதீத அச்சமும் பதட்டமுமே இதற்கு காரணம் என்று. சோர்ந்து விழுகிறேன்.      உன்னோடு...