முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அடைபடும் நாட்குறிப்புகள்-1




அண்டத்தை துலாக்கோலின் கம்பி போல நீட்டித்தால் அதன் ஒரு முனையை நான் பற்றியிருக்க மறு முனையில் எனது ஆதங்கங்கள், கவலைகள், சோர்வுகள், எதிர்பார்ப்புகள், கிட்டாத உவகைகள் என எல்லாமும் அழுத்திக் கொண்டிருக்க, பாரம் தாங்காது என் முனை அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறது. நானும் முடிந்தளவு அழுத்தம் கொடுத்த போதும் சிறு அசைவு கூட இல்லை மறுமுனையில்.

கரடிகளின் தாக்கத்தால் இறங்கிக் கொண்டிருக்கும் பங்கு மதிப்பு வரைபடத்தில் பாதாளம் நோக்கிய புள்ளியில் என் உணர்ச்சிகள் பேயை போல் நிற்கின்றன. மறுமுனையில் எளிய என் உரு நிழலின் எடையை ஒத்திருக்கிறது.

சொல்லி தீராத நாட்குறிப்பின் பக்கங்களில் முதல் பத்தியை மேற்கண்டவாறு தொடங்குகிறேன்.

கல்லூரி காணாத நாள் இன்று. நேற்றைய நாளின் கொடூரம் இன்றைய காலையை இருளுக்கு உள்ளாக்கியது. பொழுது விடிகையில் எழாத உடல் பொழுதெல்லாம் உற்சாகத்தோடு இருக்கும் என்று எதிர்பார்ப்பதற்கில்லை.

முதல் வேலையை ஓரளவு நிறைவோடு செய்து முடித்தேன். பிற்பகலில் தூறிய ஓரளவு மழையைப் போல. சூரியன் ஒளிந்துக் கொண்ட நாட்களில் இன்றும் சேரும்.

அம்ருதா இதழில் பர்மா குறித்து மு.இராசேந்திரன் எழுதிய கட்டுரை ஒன்றை வாசித்தேன். ஏதோவொன்று என்னை அத்தோடு பிணைத்துக் கொண்டுள்ளது. எனது பெரியய்யா வாழ்ந்த நிலம் .

ஹால என்கிற மொழிபெயர்ப்பு நாவலில் நான்கில் ஒரு பங்கு பக்கங்களைப் படித்தேன். ஹால என்றால் ஆண்மைக் குறைவு என்று பொருள். மூன்றாவது திருமணம் செய்த பிறகு இந்த பாதிப்புக்குள்ளாகிறான் அச் செல்வந்தன். மூன்று பெண்டாட்டிகள், பதினொரு பிள்ளைகள், அவன் மற்றும் ஆப்பிரிக்க - இஸ்லாமிய செல்வந்த நிலை - இவற்றை நாவல் பேசுகிறது.

புதிய பணியோடு தொடர்புடைய அலுவலகம் சென்றேன். சீரான மனிதரைச் சந்தித்தேன்.

செய்ய மறந்த வேலைகளின் அழுத்தத்தை உணர்கிறேன். நேர மேலாண்மையின் அவசியம் தவறுகையில் இத்தகு நிலையில் தத்தளிக்கிறேன்.

(நாட்குறிப்பு தேதி 16,அக்.2018 06:00 பி.ப.)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

முன் கூறப்பட்ட சாவின் சரித்திரம்- நாவலுடனான பயணங்கள்

முன் கூறப்பட்ட சாவின் சரித்திரம் காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ் ( Gabriel Garcia Marquez) மொழிபெயர்ப்பு: அருமை செல்வம் , அசதா காலச்சுவடு @2016 (மாய எதார்த்தவாத இலக்கியங்களில் பெரிதும் அறியப்பட்ட எழுத்தாளர் காப்ரியேல் அவர்களின் ‘முன் கூறப்பட்ட சாவின் சரித்திரம்’ என்கிற நாவல் குறித்தான பகிர்வு)      ஒரு நகரம் அது. அன்று திங்கட்கிழமை. கடந்த மூன்று நாட்களாக நடந்திருந்த கல்யாண ஆரவாரத்தின் முடிவுக்கும், காலை நிகழவிருந்த பிஷப் வருகைக்குமான இடைவெளியில் ஒரு கொலைக்கான திட்டமிடல் நடந்தேறுகிறது. பிஷப் வந்து சென்ற பிறகு கொலையும் நடந்தே முடிந்து விடுகிறது. அனேகமாக அவ்விடத்தில் இருந்த அனைவரும் கொலை குறித்து ஏதோவொரு வகையில் முன்பே அறிந்திருக்கின்றனர். அனைவரும் கொலை செய்ய முயற்சிப்பவர்கள் உட்பட அந்த கொலை நடைபெறாமல் இருக்கவே முயற்சிக்கின்றனர் தம்மளவில். எல்லாவற்றையும் மீறி நடந்தேறும் நிகழ்வின் பாதிப்பு கால் நூற்றாண்டுக்கும் மேலாக உயிர்ப்புடன் இருப்பது விதியின் பலத்தை பேச செய்கிறது.      கொலை செய்யப்பட்டவனுக்கு நீண்ட கால நண்பன் அந்த கொலையோ...

பேரன்பாளனின் சாலை!

இரு விழிகள். முடிவுகளற்ற சுழல் பாதை போல இருமை சூழ்ந்து அதன் மாய வலைக்குள் ஈயை போல் சிக்க வைக்க முயற்சிக்கின்றன. மேலும் கீழும் தீட்டப்பட்ட கருப்பு பட்டைகள் என்னை மட்டும் நோக்கு என கவனக்குவியலைத் தன்வயப்படுத்துகின்றன. மிக கூர்மையான மூக்கின் பக்கவாட்டுத் தோற்றம் சாலையோர பூங்காவினை விட்டு செல்ல மனமில்லாது பொழுது சாய்ந்த பின்னும் விளையாடிக் கொண்டிருக்கும் சிறுவன் அம்மா வேலை முடித்து அழைத்து செல்ல கூப்பிடும்போது 'ஒரு தடவ' என கடைசியாக விளையாடிய சறுக்கு பலகையை ஒத்திருக்கிறது. நான் அச்சிறுவன். கவனமாக உருண்டு வரும் நீர்த்துளிகளில் ஒன்று மட்டும் சிறிது அழுத்தத்தோடு விழுந்துவிட்டதால் பதிந்த பள்ளம் போலான சிறு குழி மூக்கிற்கும் இதழ்களுக்கும் நடு மையத்தில். இதழ்கள் துருத்திக் கொண்டிருக்க இலாவகம், இருப்பதிலேயே மிக உயரமான மலைமுகட்டின் சிறு நுனியில் தொங்கி கொண்டிருந்தாலும் பற்றிக் கொள்ளும் அளவுக்கு பிளவுகளை வழங்கும் இயற்கையின் கருணையை நிரவியது போலான தோற்றத்தை அளித்துவிடுகிறது. வடிவங்களுக்கு அப்பாற்பட்டது இயற்கை. இயற்கைக்கு உட்பட்டது அழகு. கவிஞர்களை நம்பாதே. பேரன்புக்காரன் பயணிக்கும் சாலையில் ...

ஒரு கடிதம்

அன்பின் பிரபாவுக்கு ,      நீ நலமாக இருப்பாய் என நம்புகிறேன். இந்த நாட்களின் அழுத்தத்தில் இருந்து விலகி நிற்கும் வழி தெரியாமல் இருந்த எனக்கு உன் குறுஞ்செய்தி சிறிது விடுதலை தந்தது. ஒற்றை அறைக்குள் எதிரொலிக்கும் என் மனதில் இருந்து எழும் ஓசை அச்சம் கொடுக்கிறது. சமூக வலைத்தளங்கள், செய்தி நேரலை எதுவும் உவப்பானதாக இல்லை. வாசிப்பது மட்டுமே இப்போதான ஆறுதல். அதிலும் முழு மனதாக இணைய இயலாமல் அந்தக் கதையினை இந்தச் சூழலுக்கு பொருத்திப் பார்த்து உடைந்து போகிறேன்.       உதாரணத்திற்கு சொல்கிறேன். நோர்வீஜியன் வுட் அத்தியாயங்களில் டோருவும் நவோகாவும் நடந்து போகிற தருணங்களில் அவர்களுக்கு முக கவசம் அணிந்ததாக நானே கற்பனை செய்துக் கொள்கிறேன். நவோகா சிகிச்சைக்காக தனித்து இருப்பது அவளை தனிமைப்படுத்தும் அசாதாரண சூழல்- கிருமிகளால் விளைந்தது என அச்சம் கொள்கிறேன். மிடோரியைத் தொடாது இருக்க டோருவை நானே விலக்கி வைக்கிறேன். என்னால் புரிந்துக் கொள்ள முடிகிறது எனது அதீத அச்சமும் பதட்டமுமே இதற்கு காரணம் என்று. சோர்ந்து விழுகிறேன்.      உன்னோடு...